(எம்.மனோசித்ரா)
நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 93 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை 183 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 93 100 ஆக உயர்வடைந்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 89 407 பேர் குணமடைந்துள்ளதோடு , 3059 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் மரணங்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வியாழக்கிழமை மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகின.
கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த 80 வயதுடைய பெண்னொருவர் கொவிட் நிமோனியா , நுரையீரல் தொற்று என்பவற்றால் மார்ச் 31 ஆம் திகதி கண்டி தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
எஹெலியகொட பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆனொருவர் கொவிட் நிமோனியாவுடன் இரத்தம் நஞ்சானமையால் மார்ச் 31 ஆம் திகதி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
பாணந்துரை பிரதேசத்தை சேர்ந்த 85 வயதுடைய ஆனொருவர் கொவிட் நிமோனியாவால் மார்ச் 31 ஆம் திகதி ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM