(செ.தேன்மொழி)
பன்னிபிட்டி - பத்தரமுல்ல வீதியில் காருடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிபிட்டி - பத்தரமுல்ல வீதியில் பொல்வத்த பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 1.10 மணியளவில் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்போது பத்தரமுல்ல பகுதியிலிருந்து பொரளை நோக்கிச் சென்ற காரை , பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் முன்னோக்கி செல்ல முற்பட்ட போது காருடன் மோதி , பின்னர் அது மின் கம்பத்திலும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் , மற்றைய இளைஞர் கலுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
யட்டியாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரும் , மீகொட பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹரகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM