தடுப்பூசி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு

Published By: Vishnu

02 Apr, 2021 | 01:52 PM
image

நாட்டில் கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் முதல் டோஸ் போடும் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா அண்மையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி ஏற்றுமதியை நிறுத்தியது. இதன் விளைவாக தடுப்பூசிகளைப் பெறுவதில் தாமதம் இருப்பதால் கொவிட் தடுப்பூசி திட்டத்தின் முதல்ம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

சீரம் நிறுவனத்திடமிருந்து உத்தரவிடப்பட்ட அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை இலங்கை உரிய நேரத்தில் பெறும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன கடந்த வாரம் உறுதியளித்திருந்தார்.

எனினும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளின் அடுத்த பங்கு உரிய நேரத்தில் வரும் என்று இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு ஒரு உறுதிமொழியைப் பெற முடியவில்லை.

இதன் விளைவாக, தடுப்பூசி திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது, மீதமுள்ள பங்குகள் தேவைப்பட்டால் இரண்டாவது டோஸ்ஸிற்காக பயன்படுத்தப்படும்.

உலக சுகாதார ஸ்தாபனம் தடுப்பூசியின் முதல் டோஸ்ஸை பெற்றுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது டொஸ்ஸை 12 வாரங்களின் பின்னர் செலுத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்து.

இதனிடையே சீனாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட 6 இலட்சம் சினோஃபார்ம் தடுப்பூசியானது எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பக கட்டமாக இலங்கையில் உள்ள சீன நாட்டவர்களுக்கு செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் முதற்கட்டமாக கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இம்மாதம் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

எதிர்வரும் சில வாரங்களில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்திற்கமைய இலங்கைக்கு இலவசமாக கிடைக்கப் பெறவுள்ள தடுப்பூசிகளை மீண்டும் நாட்டு மக்களுக்கு வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையில் தற்போது உபயோகிக்கப்படுகின்ற கொவிட்ஷீல்ட் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் நேற்று வியாழக்கிழமை வரை 9 இலட்சத்து 13 219 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களுக்கு 12 வாரங்களின் பின்னர் இரண்டாம் கட்டமாக தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளமைக்கமைய இம்மாதம் 19 ஆம் திகதி முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04