'கர்ணன்' படக்குழுவினர் மீது வருத்தப்படும் புதுமுக நடிகை

Published By: Digital Desk 2

01 Apr, 2021 | 05:17 PM
image

'கர்ணன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகும் மலையாள நடிகை ரஜிஷா விஜயன், படக்குழுவினர் மீது வருத்தமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் 9ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் 'கர்ணன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மலையாள நடிகை ரஜீஷா விஜயன் அறிமுகமாகிறார். 'கர்ணன்' படத்தின் விளம்பர நிகழ்வுகளில் பங்குபற்றி படக்குழுவினருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வரும் இவருக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என படக்குழுவினர் மீது அறிமுக நடிகை ரஜீஷா விஜயன் வருத்தத்தில் இருக்கிறாராம்.

இது குறித்து நடிகையின் தரப்பிடம் பேசியபோது, 'படத்தின் ஓடியோ வெளியீட்டு விழாவில் நான் உட்பட நான்கு பெண்கள் பங்குபற்றினோம்.‌  இந்தப்படத்தில் கதையின் நாயகியாக  தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். ஓடியோ வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட ' வுட்றாதீங்க அப்பு..' என்ற பாடலை பாடிய பின்னனி பாடகி தீ அவர்களும், படத்தில் சிறிய வேடமாக இருந்தாலும், அழுத்தமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த சுபத்ரா மற்றும் லட்சுமி ஆகிய நான்கு பெண்களுக்கும் முன் வரிசையில் இருக்கை அளிக்காமல், பின்வரிசையில் அமர வைத்தனர். நிகழ்ச்சியின் இடையே யோகி பாபு படப்பிடிப்பிற்காக வெளியேறிய பின்னரே கதாநாயகியான எமக்கு முன் வரிசையில் அமர இடம் கிடைத்தது. இந்நிகழ்வு எமக்கு மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் தமிழ் திரை உலகிற்கு புதுமுக நடிகை என்பதாலும், புகழ் பெற்ற படத்தயாரிப்பு நிறுவனம் என்பதாலும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினேன்.' என்றார் நடிகை ரஜீஷா விஜயன்.

பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசுகையில்,' இயக்குனர் பாலா தன்னுடைய படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தி தெரிவு செய்து வைத்திருந்த நடிகை ரஜீஷா விஜயனை சந்தித்து, கதையையும் கதாபாத்திரத்தையும் விவரித்து நடிக்க வைத்தோம். எங்களுடைய முதல் சந்திப்பின் போது அவர் காலில் விபத்து ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தார்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் 'கர்ணன்' படக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ரஜீஷா விஜயனை பின் வரிசையில் அமர வைத்தது படக்குழுவினரின் திட்டமிட்ட கவனக்குறைவு என்று ஒரு தரப்பினரும், இந்த விழாவிற்கு கதையின் நாயகனான தனுஷ் வருகை தந்திருந்தால் அவருக்கு அருகில் படத்தின் நாயகியை அமர வைத்திருப்பார்கள். தனுஷ் வராததால் புதுமுக நடிகைக்கு இப்படி ஒரு பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் மற்றொரு பிரிவினரும் தெரிவிக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37