'கர்ணன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகும் மலையாள நடிகை ரஜிஷா விஜயன், படக்குழுவினர் மீது வருத்தமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகி, ஏப்ரல் 9ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் 'கர்ணன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மலையாள நடிகை ரஜீஷா விஜயன் அறிமுகமாகிறார். 'கர்ணன்' படத்தின் விளம்பர நிகழ்வுகளில் பங்குபற்றி படக்குழுவினருக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வரும் இவருக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என படக்குழுவினர் மீது அறிமுக நடிகை ரஜீஷா விஜயன் வருத்தத்தில் இருக்கிறாராம்.
இது குறித்து நடிகையின் தரப்பிடம் பேசியபோது, 'படத்தின் ஓடியோ வெளியீட்டு விழாவில் நான் உட்பட நான்கு பெண்கள் பங்குபற்றினோம். இந்தப்படத்தில் கதையின் நாயகியாக தனுஷுக்கு ஜோடியாக நடித்திருக்கிறேன். ஓடியோ வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்ட ' வுட்றாதீங்க அப்பு..' என்ற பாடலை பாடிய பின்னனி பாடகி தீ அவர்களும், படத்தில் சிறிய வேடமாக இருந்தாலும், அழுத்தமான குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த சுபத்ரா மற்றும் லட்சுமி ஆகிய நான்கு பெண்களுக்கும் முன் வரிசையில் இருக்கை அளிக்காமல், பின்வரிசையில் அமர வைத்தனர். நிகழ்ச்சியின் இடையே யோகி பாபு படப்பிடிப்பிற்காக வெளியேறிய பின்னரே கதாநாயகியான எமக்கு முன் வரிசையில் அமர இடம் கிடைத்தது. இந்நிகழ்வு எமக்கு மனதளவில் வருத்தத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் தமிழ் திரை உலகிற்கு புதுமுக நடிகை என்பதாலும், புகழ் பெற்ற படத்தயாரிப்பு நிறுவனம் என்பதாலும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கினேன்.' என்றார் நடிகை ரஜீஷா விஜயன்.
பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசுகையில்,' இயக்குனர் பாலா தன்னுடைய படத்திற்காக போட்டோ ஷூட் நடத்தி தெரிவு செய்து வைத்திருந்த நடிகை ரஜீஷா விஜயனை சந்தித்து, கதையையும் கதாபாத்திரத்தையும் விவரித்து நடிக்க வைத்தோம். எங்களுடைய முதல் சந்திப்பின் போது அவர் காலில் விபத்து ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தார்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் 'கர்ணன்' படக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ரஜீஷா விஜயனை பின் வரிசையில் அமர வைத்தது படக்குழுவினரின் திட்டமிட்ட கவனக்குறைவு என்று ஒரு தரப்பினரும், இந்த விழாவிற்கு கதையின் நாயகனான தனுஷ் வருகை தந்திருந்தால் அவருக்கு அருகில் படத்தின் நாயகியை அமர வைத்திருப்பார்கள். தனுஷ் வராததால் புதுமுக நடிகைக்கு இப்படி ஒரு பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் மற்றொரு பிரிவினரும் தெரிவிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM