(எம்.மனோசித்ரா)
நாடளாவிய ரீதியில் புதன்கிழமை அன்று போதைப்பொருள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட 113 சுற்றிவளைப்புக்களில் ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
முகத்துவாரம் பிரதேசத்தில் 9 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கஸ்கிஸை பிரதேசத்தில் பட்டோவிட்ட பிரதேசத்தில் 4 கிராம் ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொம்பே பிரதேசத்தில் 10 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கதிர்காமத்தில் மோட்டார் சைக்கிளொன்று சோதனைக்குட்படுத்தப்பட்ட போது 6 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் ஒரு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதோடு ஏனைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM