வன்முறையில் பிறந்த தேசத்தின் ஆறாத போர் வடுக்கள்

Published By: Gayathri

01 Apr, 2021 | 01:11 PM
image

த கொன்வர்சேஷன் இணையத்தின் ஆசிரியர் மிஷா கிட்செல் எழுதியகட்டுரை

தமிழில்; சதீஷ்கிருஷ்ணபிள்ளை

பங்களாதேஷ் சுதந்திரப் பொன்விழாவைக் கொண்டாடுகிறது. அந்தத் தேசம் விடுதலைபெறக் காரணமாகவிருந்த விடுதலைப்போர் ஆரம்பமானதை பங்களாதேஷ் மக்கள் நினைவுகூர்ந்துள்ளனர். 

1971ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி சுதந்திரம் பெற்ற பங்களாதேஷ், ஒன்பது மாதங்கள் நீடித்த இரத்தக்களரியில் உருவானதேசம். 

இதன்வேர்கள், இந்தியாவில் இருந்து பிரிந்து சென்று பாகிஸ்தான் தனிநாடாக மாறியதுடன் தொடர்புடையவை.

பிரித்தாண்ட பிரித்தானிய ஆட்சியாளர்கள் தெற்காசியாவை விட்டுவெளியேறியபோது, பிரிவினையுடன் தொடர்புடையவன் முறைகளில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், கோடிக் கணக்கானவர்கள் வலிந்து இடம்பெயரச் செய்யப்பட்டனர்.

அப்போதைய பாகிஸ்தான் இந்தியாவின் பெருநிலப்பரப்பால் பிரிக்கப்பட்ட இரு புவியியல் பிரதேசங்களை உள்ளடக்கியிருந்தது.

இரண்டிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்தனர். மேற்குப் பாக்கிஸ்தானில் பஞ்சாபிகள், பஷ்தூன்கள் போன்ற இனக்குழுமங்கள் இருந்தன. 

கிழக்குப் பாகிஸ்தான் வங்காளி இனத்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்தது. அதுவே இன்றைய பங்களாதேஷ்.

கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையில் நிலவிய மொழி வேறுபாடுகளும், அரசியல் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் பங்களாதேஷின் சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டன. அவை இன்றும் தாக்கம் செலுத்துகின்றன.

மொழி வேறுபாட்டை ஆராய்வோம்

பாக்கிஸ்தானின் ஸ்தாபகத்தலைவர் மொஹம்மட் அலிஜின்னா, உருதுவே புதிய பாக்கிஸ்தானின் அரச மொழியாக இருக்கவேண்டும் என்றார். 

கிழக்குப் பாக்கிஸ்தானில் வாழ்பவர்கள் பேசும் பெங்காளி என்பது இஸ்லாமியர்களின் மொழி அல்ல என்று வாதிட்டார்.

இஸ்லாம் என்ற மதத்தால் ஐக்கியப்பட்ட இரு பிராந்தியங்கள், இவையிரண்டும் பிரத்தியேக கலாசாரங்களைக் கொண்டவை. 

எனினும், புதிய பாக்கிஸ்தானுக்கு தனியொரு அடையாளத்தை உருவாக்கவேண்டும் என்ற நப்பாசையில் உருது மாத்திரம் என்ற கொள்கை அமுலாக்கப்பட்டது.

கிழக்குப் பாக்கிஸ்தானில் பெங்காளி புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. அவற்றில் பெருங்கவி ரவீந்திரநாத் தாகூரின் இலக்கியப் படைப்புக்களும் அடங்கும்.

பெங்காளி மொழியில் கல்வி கற்பிக்கக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க  https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-28#page-12

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04