ஹவுத்திகளால் ஏவப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குவாஸ்-சீரிஸ் ட்ரோனை, சவுதி எஃப் -15 போர் விமானப் படையினர் பதிலடி கொடுத்து சுட்டு வீழ்த்தும் காட்சிகள் வெளிவந்துள்ளது.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபிய இராஜ்ஜியம் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த தாக்குதல் அண்மையது.
இந்த வியத்தகு காட்சிகள் எப்போது அல்லது எங்கு படம்பிடிக்கப்பட்டன, எந்த வகையான ஏவுகணை பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து தற்போது தெரியவில்லை.
போர்நிறுத்தத்திற்கான அழைப்புக்குப் பிறகும், ஹவுத்தி உரிமை கோரப்பட்ட ஏவுகணைகளிலிருந்து சவுதி அரேபியா மீதான வான்வழித் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இராஜ்ஜியத்தின் தலைநகர் ரியாத்தின் மீதான தாக்குதலுக்குப் பிறகு, சவுதி அதிகாரிகள் அதன் எண்ணெய் ஏற்றுமதியைப் பாதுகாக்க தடுப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
ஹவுத்தி ஏவுகணை மற்றும் இராஜ்ஜியம் மீதான ட்ரோன் தாக்குதல்கள் சமீபத்திய மாதங்களில் பொதுவானவையாக காணப்படுகிறது.
ஆனால் அவை அரிதாகவே சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த மாதம், சவுதி தலைமையிலான இராணுவக் கூட்டணி, ஹவுத்திகள் ரியாத்தை நோக்கி ஒரு ஏவுகணையை ஏவியதாகக் கூறியது, கடந்த வாரம், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் சுடப்பட்ட ஒரு ஏவுகணையால் துறைமுக நகரமான ஜசானில் உள்ள ஒரு எண்ணெய் முனையம் தீப்பிடித்ததாக இராஜ்ஜியம் கூறியது.
ஈரான் ஹவுத்திகளை ஆயுதபாணியாக்குகிறது என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்கா கோரியிருந்தாலும், தெஹ்ரான் அதை மறுத்து வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM