விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா புதன்கிழமை அறிவித்துள்ளது.
கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்ட புதிய தடுப்பூசி, விலங்குகளின் ஆரோக்கியத்திற்கான பெடரல் மையத்தால் உருவாக்கப்பட்டது.
மேலும் ஆரம்பகட்ட சோதனைகளின் போது இது எந்த பக்க விளைவுகளையும் காட்டவில்லை.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் தொடங்கிய கார்னிவாக்-கோவின் மருத்துவ பரிசோதனைகளில் நாய்கள், பூனைகள், ஆர்க்டிக் நரிகள், மிங்க், நரிகள் மற்றும் பிற விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.
சோதனைகளின் முடிவுகள் தடுப்பூசி பாதிப்பில்லாதது என்ற முடிவுக்கு வர உதவியதுடன் விலங்குகள் மற்றும் அதிக நோயெதிர்ப்பு செயல்பாடுகளைக் வெளிக்காட்டியுள்ளது.
கிரீஸ், அவுஸ்திரேலியா, போலந்து, கனடா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் ஏற்கனவே கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம் காட்டியுள்ளன.
இதனால் ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படலாம் என்று ரஷ்யாவின் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவும் பின்லாந்தும் வைரஸின் மாற்ற விகாரங்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் விலங்குகளுக்கான கொவிட் தடுப்பூசிகளை உருவாக்க முயற்சிக்கின்றன.
கொரோனா வைரஸ் சிமியன் குரங்குகள் மற்றும் பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளையும் பாதிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM