சீனாவின் சினோபார்ம் (sinopharm) கொவிட் 19 தடுப்பூசியின் 6 இலட்சம் டோஸ்கள் இன்று இலங்கை வந்தடையவுள்ளது.
அதன்படி ஸ்ரீலங்கா ஏயர்லைன்ஸ் விமானத்தின் மூலம் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இவை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.
சீனாவிலிருந்து நன்கொடையாக வழங்கப்படும் இந்த தடுப்பூசி பங்குகளை சுகாதார அமைச்சகம் பெற்றுக் கொள்ளும்.
சீனாவில் தயாரிக்கப்படும் சினோபார்ம் கொவிட் தடுப்பூசிகள் முதற்கட்டமாக இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கு மாத்திரம் வழங்கப்படும்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுமதி கிடைக்கப்பெற்ற பின்னரே இலங்கை பிரஜைகளுக்கு அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு சீனாவிலுள்ள உயர்கல்வியை தொடர்கின்ற இலங்கை மாணவர்களுக்கு சினோபார்ம் கொவிட் தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்றும் இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
இலங்கை இதுவரை 1,864,000 ஆக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி அளவுகளை பெற்றுள்ளது.
அவற்றுள் 1,264,000 டோஸ்கள் இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். அதேநேரம் உலக சுகாதார அமைப்பு கோவாக்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக 264,000 அளவுகளை வழங்கியிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM