(எம்.மனோசித்ரா)
நாட்டில் தற்போது வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் விபத்துக்களால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதற்கு வழக்கு தொடரும் சந்தர்ப்பத்தில் அதற்கான தீர்வைக் காண்பதில் பல சிக்கல்கள் காணப்படுகின்றன.
இவற்றை துரிதமாக நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு குடியியல் சட்டக்கோவையில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தற்போது நாட்டில் வாகன விபத்துக்கள் அதிகரித்துள்ளன. விபத்துக்களால் நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக குடியியல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.
அதில் பாதிக்கப்பட்டவரோ அல்லது அவரது தரப்பினரால் சட்ட மருத்துவ அறிக்கை மற்றும் ஏனைய மருத்துவ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டியதுடன், அவை கட்டாயமாக உறுதிப்படுத்தலின் கீழ் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையாக கருதப்படும்.
குறித்த அறிக்கைகளில் உள்ளடங்கிய விடயங்களை உறுதிப்படுத்துவதற்காக சாட்சி வழங்குவதற்கு குறித்த மருத்துவர் நீதிமன்றத்திற்கு ஆஜராவதை உறுதிப்படுத்திக் கொள்வதை பாதிக்கப்பட்டவருக்கு அல்லது அவரது தரப்பினருக்கோ ஒப்படைக்கப்படும். அவ்வாறான வாகன விபத்து வழக்கை முடிவுறுத்துவதற்காக 10 தொடக்கம் 12 வருடகாலம் செல்கின்றமையால், குறித்த மருத்துவர் தொலைதூரப் பிரதேசங்களில் கடமையாற்றுபவர் எனின், அவரை நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கு மேலதிக செலவுகளை அரசாங்கத்திற்கு மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அவருடைய பெறுமதியான நேரத்தை தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்களும் இழக்கப்படுகின்றது.
இவ்விடயங்களை கவனத்தில் கொண்டு, சட்ட மருத்துவ அறிக்கை, உடற்கூற்றுப் பரிசோதனை, குறித்துக் காட்டப்பட்டுள்ள சாட்சியங்களாக கருதுவதற்கான ஏற்பாடுகளைத் தயாரிப்பதற்கும், அதனை பாதிக்கப்பட்டவர் உடன்படாவிட்டால் மருத்துவ சாட்சியங்களை நிராகரிக்கும் பொறுப்பு பாதிக்கப்பட்டவருக்கே ஒப்படைக்கும் வகையில் ஏற்பாடுகளை தயாரிப்பதற்கும் இயலுமான வகையில் குடியியல் சட்டக் கோவையை திருத்தம் செய்வதற்காக சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM