நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியில்லை : அவ்வாறு செயற்பட்டால் சட்ட நடவடிக்கை - பொலிஸ் பேச்சாளர்

30 Mar, 2021 | 02:48 PM
image

(செ.தேன்மொழி)

பன்னிப்பிட்டிய பகுதியில் லொறியில் மோதுண்டு காயமடைந்த மஹரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான உபபொலிஸ் பரிசோதகர் மைத்திரிபால, கலுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். 

எனினும் , லொறியின் சாரதியை தாக்கியமை சட்டவிரோதமானது. அதனால் , சம்பந்தப்பட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவின் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொட்பில் அவர் மேலும் கூறியாவது ,

பன்னிபிட்டிய பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த , போக்குவரத்து பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை லொறி சாரதியொருவரை தாக்கும் காட்சி இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது.  

இது தொடர்பில் கவனம் செலுத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரால் சரத்வீரசேகர, இது தொடர்பில் உடனே விசாரணைகளை முன்னெடுத்த , சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் , விசேட பொலிஸ் குழுவொன்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வந்தனர். அதற்கமைய சந்தேக நபரான பொலிஸ் உத்தியேகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தின் போது , கடமையில் ஈடுபட்டிருந்த மஹரகம போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியான உபபொலிஸ் பரிசோதகரை குறித்த லொறி மோதியுள்ளதுடன் , இதன்போது படுகாயமடைந்த அவர் தற்போது கலுபோவிலை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

லொறியின் சாரதியின் கவனக்குறைப்பாடின் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் , சம்பந்தப்பட்ட சாரதியை தாக்கியமை சட்டத்திற்கு புறம்பான செயற்பாடாகும். 

குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதிவழங்கப்பட்டில்லை. 

அவர் குற்றம் செய்துள்ளதாக தெரியவந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையே எடுத்திருக்க வேண்டும். அதனால் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொலிஸ் ஒழுங்காற்று விதிமுறைகளுக்கு கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியேகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவருக்கு எதிராக பொலிஸ் ஒழுங்காற்று சட்டவிதிகளுக்கமையவும் , குற்றவியல் சட்டவிதிகளுக்கு கீழும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02