மாகாண சபைத் தேர்தலை கைவிடாவிடின் மகா சங்கத்தினரை ஒன்றிணைத்து போராடுவோம் - சோபித தேரர் எச்சரிக்கை

Published By: Gayathri

30 Mar, 2021 | 02:36 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் காலத்தில்  ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்த முயற்சிக்கிறது. 

மாகாண சபை முறைமை இலங்கைக்கு பொருத்தமற்றது. மாகாண சபை தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லாவிடின் மகா சங்கத்தினரை ஒன்றினைத்து போராட்டத்தில் ஈடுப்படுவோம் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

எம்பிலிபிடிய பிரதேசத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்துமாறு நாட்டு மக்கள் எவ்விடத்திலும் குறிப்பிடவில்லை. மாறாக அரசியல்வாதிகளே  மாகாண சபை முறைமை ஊடாக இலாபம் பெற்றுக் கொள்ள  போராடுகிறார்கள். 

தேர்தல் காலத்தில்  ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கு நன்றி கடன் செலுத்தும் வகையில் அரசாங்கம் மாகாண சபை தேர்தலை நடத்த முயற்சிக்கிறது.

மாகாண சபை தேர்தல் இலங்கைக்கு பொருத்தமற்றதாக உள்ளது. மாகாண சபை முறைமை ஊடாக எவ்வித பயனும் ஏற்படவில்லை. மாறாக  மிதமிஞ்சிய செலவுகள் மாத்திரமே ஏற்பட்டுள்ளன. 

தேர்தல் முறைமை காரணமாக மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. மாகண சபை நிர்வாகம்  ஜனாதிபதியின் பிரதிநிதிகளினால் முன்னெடுக்கப்படுகிறது. இதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

மாகாண சபை முறைமையை முழுமையாக இரத்து செய்து உள்ளூராட்சி மன்றங்களை பலப்படுத்துமாறு  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளோம். 

அரசியல்வாதிகளின் சுய நல தேவைக்காக மாகாண சபை முறைமை நிர்வகிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

ஆகவே, மாகாண சபை தேர்தலை நடத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும். இல்லாவிடின் மகா சங்கத்தினரை ஒன்றினைத்து போராட்டத்தில் ஈடுப்படுவோம்.

அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பொருளாதார ரீதியில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் அதனை விடுத்து மாகாண சபை தேர்தலை நடத்த முயற்சிப்பது பயனற்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31