(எம்.மனோசித்ரா)
மகஹரகம பொலிஸ் பிரிவில் பிரதான வீதியில் சாரதியொருவரை தாக்கிய பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் பொலிஸ்மா அதிபருக்கு விசேட ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரிதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகரவினால் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமர்தனவிற்கு இச் சம்பவம் தொடர்பில் விசேட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக தெரியவரும் தகவல்களுக்கு அமைய ஒழுக்காற்று நடவடிக்கை மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது என்று பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM