(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் புதிய நிர்வாகக் குழுவொன்று தெரிவாகும் வரையில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டை நிர்வகிப்பதற்கு தற்காலிக குழுவொன்றை நியமிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களம் ஆலோசனை விடுத்துள்ளது.
கடந்த 2019 பெப்ரவி 21 ஆம் திகதியன்று பொறுப்பேற்ற ஷம்மி சில்வா தலைமையிலான கிரிக்கெட் நிர்வாகச் சபையின் 2 வருட பதிக்காலம் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாகவும், தொடர்ந்தும் அப்பதவிகளில் அவர்கள் தொடர முடியாதென்றும், அவ்வாறு தொடர்ந்தால் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சட்டத்துக்கு முரணாது என கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எழுத்து மூல ஆவணமொன்றின் மூலம் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு அறிவுறுத்தியது.
இவ்விடயம் தொடர்பில் ஆராயுமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் சட்ட மாஅதிபர் திணைக்களத்துக்கு உத்தரவு விடுத்திருந்தார்.
இதனை ஆராய்ந்த சட்ட மாஅதிபர் திணைக்களம், இதுவரை பொறுப்பிலிருந்து வந்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகக் குழுவின் பதிவக் காலம் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாகக் சட்ட மாஅதிபர் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
இதுவரை பொறுப்பிலிருந்து வந்த ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாக சபை தொடர்ந்தும் பதவி வகிக்கின்றமை சட்டத்துக்கு முறனானது.
ஆகவே, அவர்கள் தொடர்ந்தும் பதவி வகிக்க முடியாதென்றும், புதிய நிர்வாகக் குழு பொறுப்பேற்கும் வரையில், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தை நிர்வகிப்பதற்கு தற்காலிக் குழுவொன்றை நியமிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவன நிர்வாக சபைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM