கொழும்பில் விசேட அதிரடிப்படையினர் , குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸாரால் நேற்று மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறு சுற்றிவளைப்புக்களில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு , ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்புக்கள் தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்ததாவது,
விசேட அதிரடிப்படையினரால் பாணம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 3 ஏக்கர் நிலத்தில் கஞ்சா பயிரிடப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதால் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தப்பிச் சென்றுள்ள குறித்த சந்தேகநபர்கள் வசித்த இடத்திலிருந்து 5 தொலைபேசிகள் , 5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் உள்நாட்டு துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் பேலியகொடை - நுகேபார பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 205 கிராம் ஹெரோயின் , 306 கிராம் கஞ்சா, 48 000 ரூபா பணம் என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 7 கிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM