இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் 7 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்திய அணி 2:1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி புனேயில் நேற்றிரவு நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை இந்தியாவுக்கு வழங்கியது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் அதிகபடியாக ரிஷாத் பந்த் 78 ஓட்டங்களையும், ஷிகர் தவான் 67 ஓட்டங்களையும், ஹர்த்திக் பாண்டியா 65 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன் பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 322 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, 7 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.
அணி சார்பில் அதிகபடியாக டேவிட் மலன் 50 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க சாம் குர்ரன் 83 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகள் அடங்கலாக 95 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.
சர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளையும், பவுனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும் மற்றும் நடராஜன் ஒரு விக்கெட்னையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2:1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
போட்டியின் ஆட்டநாயகனாக சாம் குர்ரனும், தொடரின் ஆட்டநாயகனாக ஜோனி பெயர்ஸ்டோவும் தெரிவானார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM