(செ.தேன்மொழி)
வீதி விபத்துகள் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 11 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
வீதி விபத்துகள் காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்திற்குள் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களுள் எட்டு பேர் இன்றைய தினம் இடம்பெற்ற விபத்துகளிலும், ஏனைய மூவரும் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துகளில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் மோட்டார் சைக்கிள் பயணித்த நால்வர் , பாதசாரிகள் மூன்று மற்றும் ஏனைய வாகனங்களில் பயணித்த நால்வர் உள்ளடங்குகின்றனர்.
இந்த காலப்பகுதிகளில் இடம்பெரும் பெரும்பாலான வாகன விபத்துகளுக்கு சாரதிகளின் கவனக்குறைப்பாடு , தூக்கம் , வீதிகளில் காணப்படும் குழறுபடிகள் தொடர்பில் கவனம் செலுத்தாமை மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றமையே காரணமாக விளங்குகின்றன.
சாரதிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். சித்திரை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பலர் சுற்றுலா பயணங்கள் செல்வதற்கு தீர்மானித்திருக்கலாம்.
இவ்வாறு செல்லும் போது வாகன சாரதிகளுக்கு மதுபானங்களை வழங்குவதை தவிர்த்துக் கொள்வதுடன் , அவர்களை எப்போதும் கவனமாக வாகனத்தை செலுத்துமாறு அறிவுறுத்தல்களை செய்ய வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM