பசறை விபத்தில் பெற்றோர்களை இழந்த மூன்று பிள்ளைகளையும் பொறுப்பேற்க, தான் தயாராக இருப்பதாக, அம்பாறை அரசாங்க வைத்தியசாலை வைத்திய நிபுனர் வஜிர ராஜபக்ச தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 'மூன்று பிள்ளைகளையும் அப் பிள்ளைகளின் பாதுகாவலர்கள் என்னிடம் ஒப்படைக்க விருப்பம் தெரிவிப்பார்களேயானால், அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.
இம் மூன்று பிள்ளைகளையும் இணைத்துக்கொண்டு, எனது குடும்பத்தை பெரிதாக்கவே விரும்புகின்றேன். இப் பிள்ளைகள் மூவரது வருகையை எனது குடும்பத்தினர் மிகுந்த ஆவலுடன் எதிர்ப்பார்த்துள்ளனர்.
இப் பிள்ளைகளை விரைவில் சந்திக்கவுள்ளேன். மனிதாபிமான முறையிலேயே நான் செயற்படுகின்றேன். இன, மதம், ஜாதி எதனையும் நான் பார்க்கவில்லை. இப் பிள்ளைகளை பிரிக்க நினைக்கவில்லை. மூன்று பேரையும் ஒன்றாக வளர்க்கவே விரும்புகின்றேன். அப்பிள்ளைகள் தனது பாட்டியை விட்டு வர விரும்பாத பட்சத்தில், அவர்கள் பெரியவர்களாகும் வரை, அவர்களுக்கான உதவிகளை வழங்க எதிர்ப்பார்க்கின்றேன்' என்றும் கூறினார்.
ஆனால், மூன்று பிள்ளைகளின் பாட்டியும், உறவினர்கள் அனைவருமே அப்பிள்ளைகளை எக்காரணம் கொண்டு எவருக்கும் வழங்க அனுமதிக்கப்போவதில்லை. உதவிகள் செய்பவர்கள் இருப்பின், அவர்கள் தாராளமாக உதவிகளை வழங்கலாம்.
பிள்ளைகளின் பெற்றோரின் கனவினை நனவாக்கும் வகையில், பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து, அவர்களின் எதிர்கால வாழ்க்கையை வளம்பெற வைப்பதே எமது இலட்சியமென்று உறுதியாகக் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM