மாகாணசபை முறைமையை இரத்து செய்ய முடியாது : தேர்தல் நிச்சயம் நடத்தப்படும் - வாசுதேவ நாணயக்கார

Published By: Digital Desk 3

26 Mar, 2021 | 10:39 AM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசியலமைப்பினூடாக உருவாக்கப்பட்ட மாகாணசபை முறைமையை ஒரு சிலரது தனிப்பட்ட நோக்கங்களுக்காக இரத்து செய்ய முடியாது. எனவே மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். மாகாணசபை முறைமை அரச நிர்வாகத்திற்கு முக்கியமானது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கந்தானை பகுதியில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

மாகாணசபை முறைமையை முழுமையாக இரத்து செய்து உள்ளுராட்சிமன்ற முறைமையை பலப்படுத்துமாறு ஆளும் தரப்பின் சில உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இவை அவர்களின் தனிப்பட்ட கருத்தாகும். இவ்வாறானா தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக அரசியமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட மாகாணசபை முறைமையை ஒருபோதும் நீக்க முடியாது. அதற்கான அவசியமும் அரசாங்கத்துக்கு கிடையாது.

ஜூலையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேர்தல்  முறைமையில் சட்ட சிக்கல் காணப்படுகிறது. பழைய முறைமையின் அடிப்படையில்  தேர்தலை 3 மாத காலத்துக்குள் நடத்த முடியும். ஆனால் இதற்கு  பாராளுமன்றில் அனைத்து உறுப்பினர்களின்  ஆதரவு அவசியமாகும்.

தேர்தல் முறைமையில் காணப்படும் சிக்கல் நிலைக்கு தீர்வு காண்பதற்கு பாராளுமன்றின் ஊடாக உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் தேர்தலை உரிய காலத்தில் நடத்தியிருந்தால் இன்று அது தொடர்பில் மாறுப்பட்ட விமர்சனங்கள் தோற்றம் பெற்றிருக்காது.

மாகாணசபை முறைமையை வெள்ளை யானை என்று சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் ஊடாக பல அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச நிர்வாகத்தில் மாகாண சபை முறைமை அவசியமானது. மக்களின் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாண சபைகளின் நிர்வாகம் ஜனாதிபதியின் பிரதிநிதியால் நிர்வகிக்கப்படுவது ஜனநாயக கொள்கைக்கு முரணானது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33