(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
இணையத்தள வர்த்தகத்தை ஒழுங்குப்படுத்துவதற்கான விரைவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, ஆளுங்கட்சி உறுப்பினர் மொஹமட் முஸாமில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
இணையத்தள வர்த்தகம் தொடர்பில் எமது நாட்டில் உரிய சட்டங்களும் விதிமுறைகளும் உருவாக்கப்படவில்லை. 2003ஆம் ஆண்டுதான் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் இறுதியாக இதுதொடர்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு ஏற்ப இச்சட்டத்தில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை. பாரிய மாற்றங்களை இந்தச் சட்டத்தில் செய்ய வேண்டியுள்ளது.
நெல் ஆளை உரிமையாளர்களுக்கு அப்பால் பல்வேறு தரப்பினர் நெல் கொள்வனவை சட்டவிரோதமாக மேற்கொள்கின்றனர். இதுதொடர்பில் உரிய சட்டத்திருத்தங்கள் முதலில் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
ஆகவே, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சட்டத்தை நவீன உலகுக்கு ஏற்ப விரைவில் மாற்றங்களை மேற்கொள்ள எண்ணியுள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM