உலக நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவதை தற்காலிகமாக இந்தியா நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கான கேள்வி அதிகரித்துள்ளதால் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளதாக இந்தியாவின் மருந்து நிறுவனமான சீரம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு தேவைகளை நிறைவு செய்வதற்காகவே ஏற்றுமதி நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் குறைந்த வருமானம் பெறும் 64 நாடுகளுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் கோவக்ஸ் தடுப்பூசி ஏற்றுமதி நடவடிக்கைகளும் தாமதம் ஆகும் என யுனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இலங்கைக்கு தடுப்பூசிகள் பெற்றுக் கொடுக்கப்படும் என இந்தியா உறுதி அளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
15 இலட்சம் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனேகா கொவிட் தடுப்பூசிகளை இலங்கை கோரியிருந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 5 இலட்சம் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டதாகவும், மேலும் 5 இலட்சம் தடுப்பு மருந்துகள் எதிர்காலத்தில் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM