2022 ஆம் ஆண்டில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கரீபியனுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு மேற்கிந்தியத்தீவுகளுடன் ஐந்து டி-20 மற்றும் மூன்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்த சுற்றுப் பயணம் தொடர்பான அறிவிப்பினை இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் நிர்வாகங்கள் புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளன.
இங்கிலாந்து ஆரம்பத்தில் இந்த சுற்றுப் பயணத்தில் மூன்று டி-20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தனர். எனினும் தற்சமயம் போட்டி எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட "ரிச்சர்ட்ஸ்-போத்தம் டிரோபியை" இலக்காக கொண்டு போட்டியிடும்.
மேற்கிந்தியத்தீவுகள் அணியின் சிறந்த கிரிக்கெட் வீரர் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் இங்கிலாந்து வீரர் ஐகான் சர் இயன் போத்தம் ஆகியோரை கெளரவிக்கும் வகையில் இந்த டிரோபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடர் 2022 ஒக்டோபரில் அவுஸ்திரேலியாவில் நடைபெறும் ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ண தொடருக்கான முன்னோடிப் போட்டியாகவும் இரு அணிகளுக்கும் அமையும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM