(எம்.மனோசித்ரா)
பதுளை - பசறை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் வீதி அபிவிருத்தி அதிகாரசபை தரப்பில் தவறிழைக்கப்பட்டிருந்தால் பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர்களால் இது தொடர்பில் கேட்கப்பட்ட போது அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார்.
விபத்து தொடர்பில் பஸ் மற்றும் எதிர்திசையில் பயணித்த லொறி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே வேளை குறித்த வீதி முழுமையாக புனரமைக்கப்படவில்லை என்றும் , வீதியோரத்தில் காணப்பட்ட பாரிய கற்பாறை அகற்றப்படவில்லை என்றும் இதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையே பொறுப்பு கூற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இரு தரப்பு தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது. விசாரணைகளின் மூலம் வீதி அபிவிருத்தி அதிகாரசபையால் தவறுகள் ஏற்பட்டிருப்பின் இதற்கு பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
இதன் போது குறித்த விபத்தின் பின்னர் தேய்வடைந்த டயர்களை மாற்றாமல் பிரயாணம் செய்யும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸாரால் சோதனைகள் முன்னெடுக்கப்படுகிறது. எனினும் தற்போது நாட்டில் டயர் தட்டுப்பாடு நிலவுகிறதே என்று ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , இவ்விடயத்தை கருத்திற் கொண்டு தற்காலிகமாக இந்த சோதனை நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் , இதற்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM