நாட்டில் நேற்றைய தினம் 251 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 90,765 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட புதிய கொரோனா நோயாளர்களில் 203 பேர் பேலியகொட - மினுவாங்கொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
23 பேர் நாடு முழுவதும் உள்ள பல சிறைச்சாலைகளிலிருந்தும், 25 பேர் வெளிநாடுகளிலிருந்தும் வருகை தந்தவர்கள் ஆவர்.
இதேவேளை நேற்றைய தினம் 248 கொரோனா நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதனால் குணமடைந்த நோயளர்களின் மொத்த எண்ணிக்கை 87,306 ஆக உயர்வடைந்துள்ளது.
தற்சமயம் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 2,907 பேர் உள்ளதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 465 பேர் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.
இந் நிலையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
இதற்கமைவாக, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 552 ஆக அதிகரித்துள்ளது.
யாழ்ப்பாணம் பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM