தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் நடைமுறை குறித்து அறிவிப்பு

Published By: Digital Desk 3

23 Mar, 2021 | 12:48 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருதாக ஆட்களைப்பதிவு செய்யும் திணைக்களம் தெரிவிக்கிறது.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்கும் சேவை  தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. 

எனினும், தற்போது அரச திணைக்களங்கள் மற்றும் அலுவலகங்கள் வழமைக்கு திரும்பி வருவதால், ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டையை வழங்குவதற்கான முயற்சினை ஆட்களைப் பதிவு  செய்யும் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடுகிறது.

தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் ஒருவர் பத்தரமுல்லையிலுள்ள தலைமைக் காரியாலயத்துக்கு அல்லது தென் மாகாண காரியாலயத்துக்கு வருகை தருவதாக இருந்தால், திகதி மற்றும் எண்ணை  முன்பதிவு செய்வது கட்டாயமாகும். 

இந்தச் சேவையை பிரதேச செயலகத்தின் அடையாள அட்டைப் பிரிவைக் குறிப்பிடுவதன் மூலமோ அல்லது 011 5 226 126 அல்லது 011 5 226 100 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்வதன் மூலமோ பெற்றுக்கொள்ளலாம்.

இதேவேளை, பொதுச் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளைப் பெற விரும்பும் நபர்கள், கிராம சேவகர் மூலம் தங்கள் விண்ணப்பங்களை தமக்குரிய பிரதேச செயலகத்தின் தேசிய  அடையாள அட்டைப் பிரிவுக்கு சமர்ப்பிக்க முடியும் என ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

விண்ணப்பங்கள் திணைக்களத்தால் பெறப்பட்டதும், தேசிய அடையாள அட்டை அச்சிடப்பட்டு பதிவுத் தபாலில் விண்ணப்பதாரருக்கு அனுப்பி வைக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50