ஊடக சுதந்திரம் என்பது ஜனாதிபதியால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரமல்ல : கடுமையாக சாடும் ஜே.வி.பி

Published By: J.G.Stephan

22 Mar, 2021 | 01:38 PM
image

(எம்.மனோசித்ரா)


ஊடகங்கள் மீது எவ்விதமான அழுத்தத்தை பிரயோகிப்பதற்கும் அவருக்கு உரிமை இல்லை என்பதை  ஜனாதிபதி கோத்தாபய  ராஜபக்ஷ புரிந்துகொள்ள வேண்டும். 

ஊடக சுதந்திரம் என்பது ஜனாதிபதியால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரமோ அல்லது வரப்பிரசாதமோ இல்லை என்பதை அவருக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.



தேர்தல் காலங்களில் தனக்கான பிரசாரங்களை முன்னெடுத்த போது சில ஊடகங்களுடன் ஜனாதிபதி சுமூகமான உறவைப் பேணினார்.

எனினும் தற்போது அவருக்கு பாதகமான விடயங்களை அதே ஊடகங்கள் வெளிப்படுத்தும் போது அவற்றுக்கு எதிரானவராக செயற்படுகின்றார்.

இதன் மூலம் ஊடகங்கள் தொடர்பில் ஜனாதிபதி இருவேறுபட்ட கொள்கைகளை உடையவர் என்பது தெளிவாகிறது எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதியின் 'கிராமத்துடன் கலந்துரையாடல்' நிகழ்ச்சித்திட்டம் மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டு அவற்றுக்கு தீர்வு வழங்கப்படும் செயற்திட்டம் என்று கூறப்பட்டது.

ஆனால் அது தலைகீழாகவே இடம்பெறுகிறது. அதாவது மக்களின் பிரச்சினைகளைக் கேட்பதற்கு பதிலாக மக்களிடம் சென்று ஜனாதிபதி தன்னுடைய பிரச்சினைகளைக் கூறிக் கொண்டிருக்கிறார்.

14 மாதங்கள் தான் ஆட்சி செய்துள்ளதாகவும் எனினும் இந்த காலப்பகுதியில் எந்தவொரு ஊடகத்தின் மீதும் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஊடகங்கள் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்கு தனக்கு உரிமை இருக்கிறது. எனினும் நான் அந்த உரிமையைப் பயன்படுத்தவில்லை என்ற கோணத்திலேயே ஜனாதிபதியின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

ஆனால் அவருக்கு அவ்வாறு எந்த அதிகாரமும் கிடையாது. ஊடகங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கும் அதிகாரம் தனக்கு கிடையாது என்பதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும்.

தான் ஊடக சுதந்திரத்தை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார். ஊடக சுதந்திரம் என்பது ஜனாதிபதியால் வழங்கப்படும் அனுமதிப்பத்திரமோ அல்லது வரப்பிரசாதமோ அல்ல.

தான் இது வரை ஊடகங்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கவில்லை என்று கூறுவதன் மூலம் அவர் ஊடகங்களை அச்சுறுத்துகின்றார். எனினும் முன்னர் காணப்பட்டதைப் போன்று ஊடகங்களுக்கு பாடம் புகட்டும் சூழல் தற்போது இல்லை என்பதை ஜனாதிபதி புரிந்துகொள்ள வேண்டும் என்றார். 

மேலும்,  சூழலை நேசிக்கும் ஜே.வி.பி என்ற போலியான முகப்புத்தக கணக்கில் பகிரப்படும் விடயங்களை உதாரணம் காட்டி ஜனாதிபதி மக்கள் மத்தியில் உரையாற்றுகின்றார். முகப்புத்தகத்தில் போலியான பக்கத்தையும் உண்மையான பக்கத்தையும் கூட அறிந்து கொள்ள முடியாத நிலையில் நாட்டில் ஜனாதிபதி இருப்பது கவலைக்குரியது.

ஜனாதிபதியின் இயலாமை மற்றும் அறியாமையினால் கட்சியொன்றின் மீது குற்றஞ்சுமத்த இடமளிக்க முடியாது. எனவே குறித்த போலியான முகப்புத்தக பக்கம் தொடர்பில் குற்றவிசாரணைப்பிரிவில் முறைப்பாடளிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

குறித்த போலி முகப்புத்தக கணக்கு ஜனாதிபதி அல்லது அவர் சார்ந்தவர்களால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் காணப்படுகிறது.

எனவே ஒரு கட்சியின் பெயரைக் சுட்டிக்காட்டி தெரிவித்த கருத்திற்கு அவர் நிச்சயம் பொறுப்பு கூற வேண்டும். எனவே எமது முறைப்பாடு தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58