சதீஷ் கிருஷ்ணபிள்ளை
அரசகுடும்பம். ஆதனை பிரிட்டனின் பாரம்பரிய பெருமை எனலாம். தமது தேசத்திற்குரிய மனிதர்களின் வேரும், அடையாளமும் அரச குடும்பமே என்பார்கள், பாரம்பரியத்தை நேசிக்கும் பிரித்தானியா பிரஜைகள். போரும் நெருக்கடிகளும் நிகழ்ந்த சமயங்களில், தேசத்தின் ஐக்கியத்தைப் பேணும் அடையாளமாகமன்னர்களும் மகாராணிமாரும் திகழ்ந்தார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு.
இன்றும் அப்படித்தானா என்று எவரும் கேட்கலாம். அரச குடும்பத்திற்குள் ஆயிரம் நெருக்கடிகள். அதன் பாரம்பரிய பெருமையை மாத்திரமன்றி, இருப்பையே கேள்விக் குறியாக்கும் சிக்கல்கள். அரசகுடும்பத்தில் ‘மக்களின் இளவரசியாக’வாழ்ந்தவர், டயானா.
அரண்மனையின் இருண்ட சுவர்களுக்குள் வாழும் வாழ்க்கை எவ்வளவு கடினமானது என்பதைப் பகிரங்கப்படுத்தியவர். அவரது கருத்தை உலகம் செவிமடுத்தது. அனுதாபம் காட்டியது.
உயிரிழந்து போனார், டயானா. ஆனால், அரசகுடும்பம் என்ற நிறுவனம் தளரவில்லை. 2ஆவது எலிசபெத் மகாராணியார் என்ற இரும்பு பெண்மணியால் அதன் போக்கில் இயங்கியது.
எனினும், மகாராணியின் பேரன், இளவரசர் சார்ள்சின் இரண்டாவது மகன் ஹரியும், அவரது மனைவியும் அரச குடும்பத்தின் ஆணிவேரை அசைத்திருக்கிறார்கள். அரச குடும்பமென்ற நிறுவனம்ரூபவ் காலத்திற்கு ஏற்றவாறு மாறவேண்டும் என்ற நாட்டம் கொண்டவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர்ரூபவ் இளவரசர் ஹரி.
ஒரு கட்டத்தில், அரியணை சுகமும் வேண்டாமெனக் கூறி, தமது மனைவியுடன் அமெரிக்கா சென்று, சலுகைகள் எதுவும் இன்றி சாதாரணப் பிரஜையாக வாழ்ந்து வருகிறார்.
அமெரிக்காவில் பிரபல தொலைக்காட்சி ஆளுமை ஒப்ராவின்ப்ரீயுடன் நடத்திய நேர்காணலில், ஹரியும் அவரது மனைவியும் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் ஆழமானவை.
அவை அரச குடும்பத்திற்கு விமோசனம் கிடையாது என்ற நிதர்சனத்தை உலகறியச் செய்துள்ளன. ஹரியை காதல் திருமணம் செய்து கொண்ட மேகன்ரூபவ் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் நடிகை. அவரது தாய் ஆபிரிக்க வம்சாவளி அமெரிக்கர். தந்தை வெள்ளையர்.
ஹரி, மேகன் தம்பதிக்குப் பிறக்கப் போகும் பிள்ளையின் தோல் என்ன நிறமாக இருக்கும் என்ற அரச குடும்பத்தில் கேள்விக்கணை தொடுக்கப்பட்டதாகரூபவ் இந்தத் தம்பதி கூறியது.
இது தீவிரமான குற்றச்சாட்டு. இன-ரீதியான பன்முகத்தன்மையை வரித்துக் கொள்ளலே புதிய நாகரிகம் எனக் கருதும் உலகில்ரூபவ் அரச குடும்பத்திற்குள் இத்தனை இனவாதமா என்று ஆச்சர்யப்பட வைக்கும் கேள்வி.
இனவாதத்தைக் கக்கியவர், மகாராணியாரோ, அவரது கணவரோ அல்ல என்பதை ஹரி தெளிவுபடுத்தினார். ஓப்ராவின்ப்ரீயுடனான நேர்காணலில், தமது பாட்டியாரைத் தாம் பெரிதும் மதிப்பதாக ஹரி கூறினார்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-03-21#page-12
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM