2021 ஆம் ஆண்டுக்கான வீதி பாதுகாப்பு டி-20 சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியானது இன்றைய தினம் இலங்கை லெஜண்ட்ஸ் மற்றும் இந்திய லெஜண்ட்ஸ் ஆணிகளுக்கிடையே நடைபெறவுள்ளது.
இந்தியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத்தீவுகள், பங்களாதேஷ், அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் களம் காணும் வீதி பாதுகாப்பு உலக இருபதுக்கு : 20 சம்பியன்ஷிப் போட்டியானது இந்தியாவில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
இதில் லீக் போட்டி முடிவுகளின் அடிப்படையில் இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் லெஜண்ட்ஸ் ஆகிய அணிகள் வெளியேற, அரையிறுதிப் போட்டிக்கு இலங்கை, இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணிகள் நுழைந்தன.
ராய்பூர் மைதானத்தில் கடந்த 17 ஆம் திகதி நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணியும், பிரையன் லாரா தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் லெஜண்ட்ஸ் அணியும் மோதின.
இப் போட்டியில் இந்திய அணியானது 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
அதேபோல் கடந்த 19 ஆம் திகதி அதே மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் திலகரத்ன டில்சான் தலைமையிலான இலங்கை லெஜண்ட்ஸ் அணியினறும், ஜோன்டி ரோட்ஸ் தலைமையிலான தென்னாபிரிக்க லெஜண்ட்ஸ் அணியினரும் மோதினர்.
இப் போட்டியில் இலங்கை அணியானது 8 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது.
இந் நிலையிலேயே இன்றிரவு மும்பையில் இன்றிரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும் இறுதி ஆட்டத்தில் இரு அணிகளும் களம் காணுகின்றனர்.
சம பலம் கொண்ட இரு அணிகளும் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதவுள்ளமையினால் இப் போட்டியானது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது மாத்திரமன்றி கடந்த 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் நினைவினையும் நம் மனதில் சற்று எட்டிப் பார்க்க வைக்கிறது இந்த ஆட்டம்.
அதிரடி ஆட்டக்காரர்களை கொண்டுள்ள இந்திய அணியானது நடப்பு தொடரில் இரு தடவைகள் 200 க்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளது.
குறிப்பாக சேவாக், சச்சின், யுவராஜ் சிங் மற்றும் யூசப் பத்தான் போன்றவர்கள் போட்டியின் எந்த தருணத்திலும், அதிரடி மூலம் எதிரணிக்கு மரண பயம் ஏற்படுத்தக் கூடியவர்களாக உள்ளனர்.
அதேபோல் பந்து வீச்சிலும் மன்பிரீத் கோனி, மொஹமட் கைஃப், சகிர் கான், முனாஃப் படேல், இர்பான் பதான் மற்றும் பிரக்யன் ஓஜா போன்ற பந்து வரிசையினை கொண்டுள்ளது.
இந்திய அணியின் நிலை அவ்வாறிருக்க இலங்கை அணியானது துடுப்பாட்டத்தை விட பந்து வீச்சில் எதிரணியை திக்குமுக்காட செய்யும் வியூகத்தில் அவர்கள் கை தேர்ந்தவர்களாக உள்ளனர்.
குறிப்பாக அணித் தலைவர் டில்சான் தனது சூழல் மூலம் எதிரணி வீரர்களை கதிகலங்க வைத்து வருகிறார். டில்சானுக்கு உறு துணையாக சூழல் பந்து வீச்சில் ரங்கன ஹேரத் சனத் ஜெயசூரிய போன்ற பந்து வீச்சாளர்களும் தமது பங்களிப்பினை திறம்பட வழங்கி வருகின்றனர்.
வேகப் பந்து வீச்சினை பொருத்தமட்டில் நுவான் குலசேகர, தம்மிக பிரசாத், ஃபர்வீஸ் மஹாரூப் போன்றவர்களும் சவால் விடக்கூடியவர்கள்.
பந்து வீச்சில் மாத்திரமன்றி துடுப்பாட்டத்திலும் இலங்கை அணி நல்ல நிலையில் உள்ளது.
எவ்வாறெனினும் இந்த ஆட்டத்தை இலங்கை அணி தனது பந்து வீச்சு வியூகங்களின் மூலம் கட்டுப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM