கலைஞர், பத்திரிகையாசிரியர், புதிய அலை கலை வட்ட நிறுவுனர் போன்ற பல்வேறு தகைமைகளைக் கொண்ட ராதாமேத்தாவின் முதல் நூலாக அவர் பத்திரிகைளில் எழுதி வெளிவந்த கலைத்துறை சார்ந்த கட்டுரைத் தொகுப்பான “உள்ளத்தில் வைப்போமா? என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் 28 ஆம் திகதி (பௌர்ணமி தினம்) அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது.
கொழும்பு -11 கதிரேசன் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுக்கு முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கே.பி.எ.அரசரட்ணம் தலைமை ஏற்கிறார்.
இந்த நூலை தனது புரவலர் புத்தகப் பூங்காவின் 40ஆவது வெளியீடாக வெளிவர செய்துள்ள இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர், இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கிறார்.
முதற்பிரதியை தொழில் அதிபரும், நகைச்சுவைக் கலைஞருமான எம். பிரேம்ராஜ் பெற்றுக்கொள்கிறார். இந்த நூலின் ஆய்வுரையை தொழிலதிபரும், அறங்காவலருமான கணேஷ் ஈசுவரனும் வாழ்த்துரையை தினகரன் பத்திரிகையின் ஆசிரியர் தே. செந்தில்வேலவரும், நூல் ஆய்வுரையை கொழும்பு செயலாளர் செயலகத்தின் கலை,கலாசார உத்தியோகஸ்தர் திருமதி கிறிஸ்ரிரோஸூம் வழங்குகின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் மற்றொரு அம்சமாக புதிய அலை கலை வட்டம் நடத்திவரும் எவோட்ஸ்-2021 கலாசாரப்போட்டியில் பாடல் எழுதும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
மேற்படி நிகழ்வில் கலை இலக்கியத்துறை, ஊடகத்துறை மற்றும் சமூக அரசியல் துறையைச் சார்ந்த முக்கிய பிரமுகர்கள் கௌரவ, சிறப்பு அதிதிகளாக கலந்து கொள்ளவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM