(செ.தேன்மொழி)
கொழும்பு - கிரேண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருள் விவகாரம் தொடர்பில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக , கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் கொலைச்செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,
கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவலோக்க விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு மணியளவில் , ஐஸ் போதைப் பொருளை விலைக்கு பெற்றுக் கொள்வது தொடர்பில் உயிரிழந்த இளைஞனுக்கும் , சந்தேக நபருக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டிருந்த இருவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் சந்தேக நபர் உயிரிழந்த இளைஞனின் கழுத்து பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதுடன் , படுகாயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சேதவத்த - வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிரேண்ட்பாஸ் பொலிஸார் மேற்படி பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளனர். மோதலின் போது சந்தேக நபரும் காயமடைந்துள்ளதுடன் , அவர் தற்போது பொலிஸாரின் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM