(இராஜதுரை ஹஷான்)
நாம் குறிப்பிடும் கருத்துக்கள் வெற்று குண்டா அல்லது கை குண்டா என்பது மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்கவுக்கு வெகுவிரைவில் தெரிய வரும்.
தற்கொலை குண்டுத்தாரிகளின் தந்தையான இப்ராஹிம் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக செயற்பட்டமை குறித்து விரைவில் இவர் தெளிவுப்படுத்தலை முன்னெடுக்க நேரிடும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
கொழும்பில் சுயதொழில் புதிய சம்மேளன அலுவலகத்தை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரகாரம் மேல்மாகண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் , மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு சம்பவங்களில் இவர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்புப்பட்டுள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
நாட்டின் பொதுச்சட்டம் குறித்த அண்மையில் இவர் சர்ச்சைக்குரிய கருத்தினை குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் குறித்தும் விசாரணை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.
மதத்தை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படும் முரண்பட்ட கருத்துக்கள் அடிப்படைவாதத்துக்கு வழி வகுத்து அனை தீவிரவாதமாக தோற்றம் பெறும். ஆகவே எதனையும் அலட்சியப்படுத்த முடியாது.
தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொண்டு நாம் குறிப்பிடும் கருத்துக்கள் வெற்று வெடி என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க விமர்சிக்கிறார். எமது கருத்துக்கள் வெற்ற வெடியா அல்லது. கைக்குண்டா என்பது வெகுவிரைவில் அவருக்கு தெரிய வரும்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் தந்தை இப்ராஹிம். இவர்கள் ஊடாக பயங்கரவாதி சஹ்ரானுக்கு 300 இலட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது.
இப்ராஹிம் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராவார். ஆகவே இவ்விடயம் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க வெகுவிரைவில் தெளிவுப்படுத்த நேரிடும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM