வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு புதிய விதிமுறைகள் !

Published By: Digital Desk 4

18 Mar, 2021 | 05:32 PM
image

(எம்.மனோசித்ரா)

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பான புதிய சுற்று நிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் பல திருத்தங்கள் விரைவில் - சுகாதார சேவைகள்  பணிப்பாளர் | Virakesari.lk

குறித்த சுற்று நிரூபத்திற்கமைய கொவிட் தடுப்பூசி ஏற்றி பின்னர் நாட்டுக்கு வருகை தருபவர்களின் தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வருகை தருபவர்கள் முதலாவது நாளிலும் ஏழாவது நாளிலும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

இவ்விரு பரிசோதனைகளிலும் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அன்றைய தினமே அவர்கள் ஹோட்டலிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேற முடியும்.

இதே வேளை கொவிட் தடுப்பூசிகளைப் பெற்று இரு வாரங்களின் பின்னர் நாட்டுக்கு திரும்புவர்களுக்கு குறித்த சுற்று நிரூபத்தில் மாறுபட்ட தனிமைப்படுத்தல் விதிகள் உள்ளிடக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய தடுப்பூசியை பெற்றுக் கொண்டு இரு வாரங்களின் பின்னர் நாட்டுக்கு வருபவர்கள் விமான நிலையத்தில் மருத்துவ அதிகாரிகளிடம் உரிய சான்று பத்திரத்தை காண்பிக்க வேண்டும். தடுப்பூசியை பெற்றுக் கொண்டமைக்கான சான்று பத்திரம் ஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழிகளில் காணப்பட்டால் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இவ்வாறானவர்கள் அரச அதிகாரிகளால் தனிமைப்படுத்தலுக்கான ஹோட்டல் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இவர்கள் நாட்டை வந்தடைந்து 24 மணித்தியாலத்திற்குள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட தனியார் அல்லது அரச ஸ்தலங்களில் பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்க வேண்டும்.

பரிசோதனையில் கொவிட் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் , முடிவுகள் வெளியானவுடன் அவர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொள்ளலாம். மேலும் இவர்கள் தமது சொந்த போக்குவரத்து முறைமையால் வீடுகளுக்குச் செல்ல வேண்டும். அத்தோடு தமது விபரங்கள் தொடர்பில் பிரதேச மருத்துவ அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

நாட்டுக்கு வரும் சகல பிரஜைகளும் 7 நாட்களுக்குள் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும். பொது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படும் நபர்கள் முதலாம் நாளிலும் 10 ஆம் நாளிலும் பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்க வேண்டும். இவ்விரு பரிசோதனைகளிலும் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் 10 நாட்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04