(எம்.மனோசித்ரா)
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் தனிமைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பான புதிய சுற்று நிரூபம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் இன்று வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்று நிரூபத்திற்கமைய கொவிட் தடுப்பூசி ஏற்றி பின்னர் நாட்டுக்கு வருகை தருபவர்களின் தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வருகை தருபவர்கள் முதலாவது நாளிலும் ஏழாவது நாளிலும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
இவ்விரு பரிசோதனைகளிலும் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அன்றைய தினமே அவர்கள் ஹோட்டலிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வெளியேற முடியும்.
இதே வேளை கொவிட் தடுப்பூசிகளைப் பெற்று இரு வாரங்களின் பின்னர் நாட்டுக்கு திரும்புவர்களுக்கு குறித்த சுற்று நிரூபத்தில் மாறுபட்ட தனிமைப்படுத்தல் விதிகள் உள்ளிடக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய தடுப்பூசியை பெற்றுக் கொண்டு இரு வாரங்களின் பின்னர் நாட்டுக்கு வருபவர்கள் விமான நிலையத்தில் மருத்துவ அதிகாரிகளிடம் உரிய சான்று பத்திரத்தை காண்பிக்க வேண்டும். தடுப்பூசியை பெற்றுக் கொண்டமைக்கான சான்று பத்திரம் ஆங்கிலம் தவிர்ந்த வேறு மொழிகளில் காணப்பட்டால் அதன் ஆங்கில மொழி பெயர்ப்பு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
இவ்வாறானவர்கள் அரச அதிகாரிகளால் தனிமைப்படுத்தலுக்கான ஹோட்டல் அல்லது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இவர்கள் நாட்டை வந்தடைந்து 24 மணித்தியாலத்திற்குள் அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட தனியார் அல்லது அரச ஸ்தலங்களில் பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்க வேண்டும்.
பரிசோதனையில் கொவிட் தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் , முடிவுகள் வெளியானவுடன் அவர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து கொள்ளலாம். மேலும் இவர்கள் தமது சொந்த போக்குவரத்து முறைமையால் வீடுகளுக்குச் செல்ல வேண்டும். அத்தோடு தமது விபரங்கள் தொடர்பில் பிரதேச மருத்துவ அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
நாட்டுக்கு வரும் சகல பிரஜைகளும் 7 நாட்களுக்குள் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும். பொது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லப்படும் நபர்கள் முதலாம் நாளிலும் 10 ஆம் நாளிலும் பி.சி.ஆர். பரிசோதனையை முன்னெடுக்க வேண்டும். இவ்விரு பரிசோதனைகளிலும் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் 10 நாட்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்ய முடியும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM