மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் துவிச்சக்கர வண்டி விபத்தில் பிரதேசவாசி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெல்லாளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தும்பங்கேணி, சுரவணையடியூற்று கிராமத்தைச் சேர்ந்த கனகரெத்தினம் கிருபைநாயகம் (வயது 64 ) என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் பற்றி தெரியவருவதாவது,
களுவாஞ்சிகுடியிலுள்ள தனது உறவினர் வீட்டிலிருந்து புதன்கிழமை இரவு தும்பங்கேணி, சுரவணையடியூற்றிலுள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருக்கையில் வீதியில் விழுந்து வீதியின் ஓரத்தில் நீர் குழாய் பதிப்பதற்காக வெட்டப்பட்டிருந்த குழிக்குள் விழுந்த நிலையில் உயிரிழந்து காணப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இந்தச் சம்பவம் தொடர்பில், களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதவானின் உத்தரவில் சம்பவ இடத்துக்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் இன்று சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் பிரேதத்தை உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.
இச் சம்பவம் தொடர்பாக, தடயவியல் பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM