டுபாயில் அண்மையில் உயிரிழந்த பிரபல பாதாள உலக தலைவனும், போதைப் பொருள் கடத்தல் காரருமான கெசல்வத்த தினுக எனும் ஆர்.ஏ.தினுக மதுஷானின் உடல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கையில் சுட்டுக்கொலை செய்தல், அச்சுறுத்தி கப்பம் பெறுதல், போதைப் பொருள் வர்த்தகம் மற்றும் விபசாரம் உள்ளிட்ட பாதாள உலகத்துடன் தொடர்புபட்ட பல திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் கெசல்வத்த தினுக பின்னணியில் செயற்பட்டிருந்தததாக நம்பப்படும் நிலையில் அவர் பொலிஸாருக்கு அவசியமான சந்தேக நபராக விளங்கினார்.
இந்நிலையிலேயே அவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் டுபாய்க்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டில் உயிரிழந்துள்ளார்.
டி.என்.ஏ பரிசோதனையைத் தொடர்ந்து சடலம் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM