'எரிபொருள் பற்றாக்குறை இல்லை': உணவு பொருட்களுக்கு விலை நிவாரணம் என்கிறார் மஹிந்த..!

Published By: J.G.Stephan

18 Mar, 2021 | 12:59 PM
image

(இராஜதுரை ஹஷான்)
எரிபொருள் பற்றாக்குறை ஏதும் காணப்படவில்லை. பாவனைக்கு தேவையான அளவு எரிபொருள் உள்ளது. ஆகவே எரிபொருளின்  விலையை அதிகரிப்பதற்கான தேவை கிடையாது. அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் ஊடாக நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.

 அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நடைமுறை பொருளாதார நிலைமை, சந்தை நிலவரம் தொடர்பிலான மீளாய்வு பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரிசி, தேங்காய்,பால்மா, மீன், இறைச்சி, முட்டை, பருப்பு மற்றும் தானிய வகைகள், பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம், உருளைக்கிழங்கு, மற்றும்  பழங்கள், எரிபொருள் ஆகியவற்றின் ஊடாக நுகர்வோருக்கு நிவாரனம் வழங்குவது குறித்து பிரதமர் அவதானம் செலுத்தினார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால்  அத்தியாவசிய பொருட்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள  சிக்கல் நிலை, அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் விலையினை அதிகரிக்குமாறு எரிபொருள் நிறுவனங்கள் முன்வைக்கும் கோரிக்கை  உள்ளிட்ட விடயங்களை வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன எடுத்துரைத்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பூகோளிய பொருளாதாரத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என மத்திய வங்கியின் பொருளாதார பிரிவு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இறக்குமதிகளை கட்டுப்படுத்தினால் சந்தையில் நெருக்கடி நிலை ஏற்படும் என மத்திய வங்கியின் அதிகாரி தெரிவித்தார்.

சுங்கத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ள மெற்றிக் தொன் 3,000 ஆயிரத்துக்கும் அதிகமான அரிசியை சதொச ஊடாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குமாறு ஜனாதிபதி செயலணியின் தலைவர் பஷில் ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50