(இராஜதுரை ஹஷான்)
கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுப்பது எதிர்கால வெற்றிக்கு சாதகமாக அமையும். விளையாட்டுத்துறை அமைச்சரின் நிர்வாக பிரிவின் கீழ் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் விசேட பொறிமுறையினை செயற்படுத்த வேண்டும் என இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.
இலங்கை உலக கிண்ணத்தை வென்று 25 வருட காலத்தை நிறைவு செய்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர்களை ஊக்கப்படுத்துவம் வகையில் பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற தேசிய கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கை சர்வதேச அளவில் பிரபல்யமடையாத காலக்கட்டத்தில் கூட கிரிக்கெட் அணிக்காக அப்போதைய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது. 25 வருடங்கள் கடந்தும் நாட்டு மக்கள் எம்மை மறக்கவில்லை.நாட்டுக்காக அர்பணிப்புடன் செயற்பட்ட காரணத்தினால் வெற்றியை பெற முடிந்தது.
நிர்வாக மட்டத்தில் சிக்கல்கள் காணப்பட்டாலும் அதனை இளம் வீரர்களிடம் வெளிப்படுத்தவில்லை. பல திறமையான பயிற்றுவிப்பாளர்கள் உள்ளார்கள் அவர்களக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.வெளிநாடுகளில் இருந்து பயிற்றுவிப்பாளர்களை அழைத்து வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கிரிக்கெட் அணியில் பல சிறப்பான செயற்பாடுகள் காணப்பட்டாலும் அதிருப்தியான செயற்பாடுகளும் மறுபுறம் காணப்படுகின்றன. கிரிக்கெட் விளையாட்டை சிறந்த முறையில் மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது எதிர்கால முன்னேற்றத்துக்கு அவசியமானதாக அமையும்.என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM