(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அகியோருக்கு எதிராக ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.யூ. ஜயசூரியவுக்கு அறிவித்தது.
தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதிலும் கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் கடமையை நிறைவேற்ற தவறிய குற்றச்சாட்டில் அவர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த விடயத்தை விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இந் நிலையில் விசாரணையை நிறைவு செய்து சட்ட மா அதிபரின் ஆலோசனையை பெறுவதற்காக விசாரணைக் கோவை கையளிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய விசாரணை அதிகாரிகள், சட்ட மா அதிபரின் ஆலோசனை இதுவரை கிடைக்கப் பெறவில்லை என மன்றில் தெரிவித்தனர்.
அதன்படி அடுத்த எதிர்வரும் ஒக்டோபர் 27 ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் மன்றில் ஆஜராகுமாறு முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மேலதிக நீதிவான் ஆர்.யூ.ஜயசூரிய உத்தர்விட்டார். இதனைவிட சட்ட மா அதிபரின் ஆலோசனையை அவசரமாக பெற்றுக்கொள்ள ஞாபகமூட்டல் கடிதத்தையும் அனுப்பினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM