(செ.தேன்மொழி)
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் மேல்மாகாண ஆளுர் அசாத்சாலியின் காரிலிருந்து மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, குற்றப்புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை கொள்ளுப்பிட்டியில் வைத்து முன்னாள் மேல்மாகாண ஆளுநனர் அசாத்சாலி கைது செய்யப்பட்டதுடன், அவர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இந்நிலையில், கைது செய்யப்படும்போது அசாத்சாலி பயணித்த காரை சோதனைக்குட்படுத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர் காரிலிருந்து, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும், அதன் தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர்.
அதற்கமைய துப்பாக்கி தொடர்பிலும் குற்றப்புலனாய்வு பிரிவினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குறித்த துப்பாக்கி கிடைக்கப் பெற்ற விதம் மற்றும் அதனால் ஏதேனும் குற்றச் செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM