மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவார்கள் - எச்சரிக்கிறார் அமைச்சர் வாசுதேவ

Published By: Digital Desk 3

17 Mar, 2021 | 04:51 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசாங்கத்திற்கு பாரிய சவாலாக காணப்படுகிறது. அரிசியின் நிர்ணய விலை பேணப்படாவிட்டால் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவார்கள். ஆகவே புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலையை பகுதியளவில் குறைக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

நீர்வழங்கல் அமைச்சில் இன்று புதன்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 வைரஸ் தாக்கத்துக்கு மத்தியில் அரசாங்கம் பொருளாதாரத்தை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்துள்ளது. சிறு ஏற்றுமதி பயிர்களின் இறக்குமதி தடை செய்யப்பட்டதன் காரணமாக சந்தையில் சிறுஏற்றுமதி பயிர்களுக்கான கேள்வி அதிகளவில் காணப்பட்டாலும் உள்ளுர் விவசாயிகள் பெருமளவில் பயனடைந்துள்ளார்கள்.  

கடந்த ஒக்டோபர் மாதமளவில் அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவில்  குறைக்கப்பட்டன.  இதன்போது சீனிக்கான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டது. இதனையே எதிர்தரப்பினர் தற்போது சீனி மோசடி என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். சீனிக்கான இறக்குமதி வரி குறைப்பினால்  எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை. சீனி விலைக்குறைப்பின் பயனை  நுகர்வோர் பெற்றுக் கொள்வதில்  சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.இவ்விடயத்தை கொண்டு தற்போது எதிர்தரப்பினர் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் அரசாங்கத்திற்கு காணப்படும் பிரதான சவாலாக உள்ளது.புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை பகுதியளவேனும் குறைக்கப்படாவிட்டால் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவார்கள். இவ்விடயம் குறித்து வர்த்தகத்துறை அமைச்சு உரிய கவனம் செலுத்த வேண்டும்.

அரிசியின் நிர்ணயத்தன்மையை நிலையாக பேணுவதில் பாரிய சிக்கல் நிலை காணப்படுகிறது.அரிசியின் மொத்த உற்பத்தியை அரசாங்கம் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். அரசியின் உற்பத்தியில் எதிர்பார்க்கப்பட்ட விளைச்சல்  இம்முறை கிடைக்கப் பெறவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08