(செ.தேன்மொழி)
நாடளாவிய ரீதியில் பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கைகளின்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் எட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 2 கிலோ 263 கிராம் 875 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
வெலிக்கடை
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய சந்தேக நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 2 கிலோ 245 கிராம் 560 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது ஹெரோயின் போதைப்பொருள் தொகை இரு பொதிகளாக பொதி செய்யப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில் ஹெரோயின் தொகை கிடைக்கப்பெற்றவிதம் தொடர்பிலும், அதனை அவர் எங்கெல்லாம் விற்பனை செய்தார் என்பது தொடர்பிலும் சந்தேக நபரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
ஜா-எல
ஜா-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்மோதர பகுதியில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 4 கிராம் 725 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தும்மோதர பகுதியைச் சேர்ந்த 59, 39 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜா- எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதிராஜ மாவத்தையில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, 7கிராம் 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தும்மோதர மற்றும் எலவேல்ல பகுதியைச் சேர்ந்த 25,26, 56 ஆகிய வதுக்கு இடைப்பட்ட மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொட
பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 90 தோட்ட பாலத்திற்கு அருகில் ,பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 3 கிராம் 570 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரேண்ட்பாஸ்
கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வதுல்ல தோட்டம் பகுதியில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து 3 கிராம் 500 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை, இத்தகைய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைக்கப் பெற்றால் 1997 என்ற இலக்கத்தை தொடர்புக் கொண்டு தெரிவிக்க முடியும்.
இதன்போது, சிறந்த தகவல்களை வழங்கும் நபர்களை உற்சாகப்படுத்துவதற்காக பெறுமதி மிக்க சன்மானங்களும் வழங்கப்படும் என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM