(நேர்காணல்:- ஆர்.ராம்)
அரசியல் களம் சதிகாரர்களால் நிறைந்திருக்கின்றது. அதற்காக மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப் போவதில்லை. அவர்களுக்கான எனது பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார். அதன் முழுவடிவம் வருமாறு,
கேள்வி:- உங்களுக்கு சட்டக் கல்வியில் எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது?
பதில்:- மக்கள் சார்ந்த சிந்தனை எனக்குள் துளிவிடத் தொடங்கிய பாடசாலைக் காலத்தில் இருந்தே சட்டக்கல்வி குறித்த ஈடுபாடும் எனக்குள் துளிர்விடத் தொடங்கியது. சட்டத்துறை சார்ந்து எனது மக்களுக்கு ஏதாவது உபகாரம் செய்ய என்னால் முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்படுத்திய வலுவான தாக்கத்தின் விளைவாக அதில் முனைப்புடன் ரூடவ்டுபட்டேன். இப்போது எனக்கு மனநிறைவு ஏற்படும் விதமாக என்னால் முடிந்த அனைத்து உபகாரங்களையும் சட்டத் துறை சார்ந்து தமிழ் பேசும் மக்கள் அனைவருக்கும் வழங்க முடியுமாக இருக்கின்றது.
கேள்வி:- குற்றவியல் சட்டத்தரணியாக நீங்கள் வாதாடிய முக்கிய வழக்குக்கள் பற்றிக் கூறுங்கள்?
பதில்:- நான்கு தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான குற்றவியல் வழக்குக்களில் நாட்டிலுள்ள பல நீதிமன்றங்களில் ஆஜராகியிருக்கின்றேன். சமூகத்தின் பல தரப்பட்டவர்களும் பயங்கரவாதத் தடைச்சட்டம், மற்றும் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு சட்டமா அதிபரினால் பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கொழும்பு, பாணந்துறை, களுத்துறை, காலி மேல் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான வழக்குக்களில் 403 வழக்குகளில் வாதாடி 402 அரசியல் கைதிகள் விடுதலையாகியுள்ளனர்.
1981ஆம் ஆண்டு குட்டிமணி, ஜெகநாதன் ஜெகன் கறுப்பன் என்ற ஞானவேல் ஆகிய மூவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குரூபவ் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் கொலை வழக்குரூபவ் 2009 ஆண்டு சுதந்திர தின விழாவிலும் தியத்தலாவ இராணுவ முகாமிலும் மஹிந்த ராஜபக்ஷரூபவ் கோட்டாபய ராஜபக்ஷரூபவ் சரத் பொன்சேகா ஆகிய பிரமுகர்களைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டி கொலைமுயற்சியில் ரூடவ்டுபட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரெத்தினத்தின் மகன் ஆதித்தியன் பத்தாண்டுகளின் பின் விடுதலை, 2005 ஆகஸ்;ட் மாதம் 12ஆம் திகதி இரவு சுமார் 10.45 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் 2005ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட சிதோர் ஆரோக்கியநாதன் பதின்மூன்று வருடங்களின் பின்னர் விடுதலை, வீரகேசரியின் தற்போதைய ஆசிரியர் சிறிகஜன் கைதும் விடுதலையும் 2006இல் கொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை தொடர்பான நீதிவான் நீதிமன்ற வழக்கிலும் 2016இல் சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலும் ஆஜராகியமை, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் கிளிநொச்சி மாவட்ட ஒழுங்கமைப்பாளரான வேலமாலிதன் செயலாளர் பொன்னம்பலம் லட்சுமி காந்தன் ஆகியோருக்கு எதிராக வெடிபொருட்கள் ஆபாச பொருட்கள் மற்றும் ஆணுறைகளை மாவட்டக்கிளைக் காரியாலயத்தில் வைத்திருந்ததாக பயங்கரவாதத் தடைப்பிரிவுப் பொலிஸாரினால் 2013ஆம் ஆண்டு தைமாதம் 12ஆம் திகதி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட வழக்கும் பின்னர் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலையும் 2018ஆண்டு ஜுலை மாதம் 2ஆம் திகதி யாழ்ப்;பாணம் வீரசிங்க மண்டபத்தில் நடைபெற்ற அரச வைபவத்தில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தண்டணைச் சட்டக்கோவை 120 பிரிவின் படி தண்டனை வழங்கக் கூடிய குற்றத்தை புரிந்துள்ளார் என பொலிஸாரால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் அன்றைய தினமே பிணையில் விடுதலை 2008இல் ஐந்து மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடற்படையினரால் கடத்தப்பட்டு திருகோணமலையில் அமைந்துள்ள சித்திரவதை முகாமில் தடுத்து வைத்து கப்பம் கோரப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் 13 கடற்படையிளருக்க எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 2006-2019இல் கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் 2006ம் ஆண்டு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய கொலைமுயற்சி வழக்கில் புற்றுநோயாளியான சந்திரபோஸ் செல்வச்சந்திரன் 12 வருட விசாரணையின் பின்னர் விடுதலை உள்ளிட்ட பல வழக்குகளை கூறலாம்.
கேள்வி:- பயங்கரவாதத் தடைச் சட்டம் அமுலாக்கப்பட்டதன் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட முதலாவது வழக்கில் ஆஜராகியிருந்தமை தொடர்பில் உங்கள் அனுபவத்தினை குறிப்பிடுங்கள்?
பதில்:- பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ் முதலாவது வழக்காக செல்வராஜா யோகச்சந்திரன் (குட்டிமணி), ஜெகநாதன் ஜெகன் மற்றும் கறுப்பன் என்ற ஞானவேல் ஆகிய மூவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குத்தான் நான் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் எடுத்த பின்னர் கனிஷ்ட சட்டத்தரணியாக ஆஜராகிய முதல் வழக்காகும்.
40 ஆண்டுகளுக்கு முன்னர் குட்டிமணி என்ற பெயர் இலங்கையில் பெரும் உணர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் 1970களில் இலங்கையில் தமிழ் போராளிக் குழுத் தலைவர்களில் ஒரு முன்னணித் தலைவராவார். 1983 ஜூலை 25 ஆம் திகதி வெளிக்கடை சிறைச்சாலையில் கொடுரமாக கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் அவரும் ஒருவராவார்.
அவரை ஆணையிறவுத் தடுப்பு முகாமில் தடுத்து வைத்து பின்னர் கொழும்புக்கு கொண்டு வந்தனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் பனாகொட இராணுவ முகாமில் தடுத்துவைத்துக் கொடூரமாக சித்திரவதை புரிந்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தினர்;.
விசாரணைகள் முடிவடைந்த பின்னர் சட்டமா அதிபர் சிவா பசுபதியினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூவருக்கும் எதிராக நீர்வேலி வங்கிக் கொள்ளையில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு மேல் நீதிமன்றில் வழங்குத் தாக்கல் செய்யப்பட்டு தினசரி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அத்துடன் நான்கு மாதங்களில் விசாரணை முடிவடைந்தது.
நீதிபதி சேனநாயக்க நீதிமன்ற இருக்கையில் அமர்ந்ததும் குட்டிமணியை தான் ஒரு சாதாரண குற்றவாளியாகப் பார்க்கவில்லை என்று குறிப்பிட்டதுடன் சட்டத்தினால் தேவைப்படுத்தப்பட்டவாறு தீர்ப்பு வழங்க வேண்டியது தனது கடமையென குறிப்பிட்டு என்றோ ஒருநாள் ஜனாதிபதி குட்டிமணிக்கு மன்னிப்பு வழங்குவாராயின் அதனைக் கேள்வியுற்று தான் மகிழ்ச்சியடைவதாக கூறி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மரண தண்டணைத் தீர்ப்பை 1983ஆம் ஆண்டு பங்குனி மாதம் முதலாம் திகதி வழங்கினார்.
மரண தண்டணைத் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் நீதிபதி குட்டிமணியிடம் அவரது இறுதி ஆசை என்ன என்று வினவியபோது “எனது மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தயவு செய்து எனது கண்களை அகற்றி கண்பார்வையற்ற ஒரு தமிழருக்கு அவற்றை பொருத்துங்கள். என்னால் சுதந்திர தமிழ் ரூடவ்ழத்தைப் பார்க்க முடியாதுபோகலாம். எனினும்ரூபவ் எனது கண்களாவது அதனைப் பார்க்கட்டும்ரூபவ் என்னைத் தூக்கிலிடுவதன் மூலம் பல்லாயிரக்கணக்கான குட்டிமணிகள் உருவாகுவார்கள” என்றார்.
அந்த கணப்பொழுதில் நீதிமன்றிற்கு வந்திருந்த பார்வையாளர்களில் கணிசமானவர்கள் மேல் நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பையும் குட்டிமணியின் இறுதி விருப்பத்தையும் ஆசையையும் கேட்டு அதிர்ச்சி அடைந்தமையையும் சில பல்கலைக்கழக மாணவர்கள் கண்கலங்கியமையையும் மறவாத நினைவாகும் அதனைத் தொடர்ந்து கைவிலங்குகள் மாட்டப்பட்ட நிலையில் நீதிமன்றிற்கு வெளியே கொண்டு வரப்பட்ட குட்டிமணி அங்கு நின்றுகொண்டிருந்தவர்களைப் பார்த்து இறுதியாக ‘பிரிவோம் சந்திப்போம்’ என்றார். இது என்றும் அழியா நினைவே.
கேள்வி:- பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட முக்கியமான வழக்குகளில் நீங்கள் ஆஜரான சந்தர்ப்பங்களில் எவ்விதமான சவால்களுக்கு முகங்கொடுத்தீர்கள்?
பதில்:- எல்லா வழக்குகளுமே ஏதோவொரு வகையில் சவாலாகவே இருக்கும். வழக்கின் தன்மையைப் புரிந்துகொண்டு சமர்ப்பிக்கப்படும் சான்றுகளையும் சாட்சிகளையும் ஆதாரங்களையும் தெளிவாக உள்வாங்கிக் கொண்டால் வழக்கை எதிர்கொள்வது இலகுவாகிடும். வழக்கை எந்த இடத்தில் உடைப்பது என்பது மிகவும் முக்கியமானது. எல்லா வழக்குகளும் உண்மைக்குப் புறம்பான புனைதலை ஏதோவோர் அடிப்படையில் எங்காவது ஒரு இடத்தில் கொண்டிருக்கும்.
விடுதலைப் போர் என்ற விடயத்தில் ஒரு இனத்துக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்குமுறையில் உண்மை குறைவாக இருக்கும் அல்லது அறவே இருக்காது. இந்த விடயத்தை சட்டரீதியில் புரிந்துகொண்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டும். அதைத்தான் நான் செய்தேன். விடுதலைப்போர் சம்பந்தப்பட்ட தளத்தில் பயங்கரவாதப் பிரச்சினைகளுடன் அல்லது அவசரகால நிலையில் என் மக்களுக்கு எதிராகப் போடப்பட்ட வழக்குகளில் பெரும்பான்மையானவை சட்டரீதியில் வலுவானவையாக இல்லை.
அதை அரச அதிகாரமும் இராணுவ அதிகாரமும் புரிந்துகொள்ளவே இல்லை. பொய்யைத் தான் முன்கொண்டு செல்கின்றோம் என்ற நிலையில் முன்னேறிக் கொண்டிருக்கும் பொலிஸார் உண்மையைக் கொண்டு திருப்பியடிக்கப்படும் போது நிலை குலைந்து போகின்றனர். அந்த இடத்தைக் குறிவைப்பதும் அடையாளப்படுத்திக் கொள்வதும் தான் சவால் மிக்கது.
கேள்வி:- வழக்குகளில் ஆஜராகும் போது அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட அனுபங்கள் உள்ளனவா?
பதில்:-இனத்தின் விடுதலை என்றொரு தளம் உருவாகும் போது அதற்கு ஆதரவுக்குரல் கொடுப்போர் துணைநிற்போர் முழுமையாக ரூடவ்டுபடுவோர் என்று பல்வேறுதரப்பினர் இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் எதிர்த்தரப்பிடமிருந்து அச்சுறுத்தல் வருவதென்பது சர்வசாதாரணமானது. அச்சுறுத்தல்களுக்கு முன்னுரிமை கொடுத்திருந்தால் 40 வருடங்களாக தலைநகரில் அரசியல் கைதிகளுக்காக வாதாடியிருக்கமுடியாது.
நமக்குள் இருக்கும் இனப்பற்றின் வீரியத்தைப் பொறுத்தே அவற்றை எதிர்கொள்வதற்கான மனநிலையும் எமக்குக் கிடைக்கும். எத்தகைய அச்சுறுத்தல் வந்தாலும் அவற்றை என்னால் இலகுவாக எதிர்கொள்ள முடியுமாக இருந்தது. ஆனால் ஒரு சந்தர்ப்பத்திலேனும் என்னால் துவண்டுபோகவோ அல்லது பின்வாங்கவோ தோன்றவில்லை.
அரசியல் கைதிகளுக்காகவாதாடிய சிரேஷ்;ட சட்டத்தரணிகளான குமார் பொன்னம்பலம்ரூபவ் நடராஜா ரவிராஜ் பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டனர் அப்படி ஏதாவது நடந்திருந்தால்
இனவிடுதலைக்காக எனதுயிரும் அர்ப்பணமாகி இருக்கும் அதுகூட எனது இனத்திற்காகவே என்பதில் திருப்தியே.
கேள்வி:- பயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும் என்று இலங்கை அரசாங்கம் ஜ.நா.விற்கு கூறியுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையாகுவதற்கு சந்தர்ப்பம் ஏற்படுமா?
பதில்:- 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்த பின்னர் அவசரகால ஒழுங்கு விதிகள் இல்லாதொழிக்கப்படும் என்றும் எந்த ஒரு அவசரகால நிலையும் இல்லாமல் நாடு சாதாரண நிலைக்குத் திரும்பிவிடும் எனவும் பொதுமக்கள் கருதினர்.
2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதி ஜனாதிபதி அவசரகால ஒழுங்கு விதிகள் நீக்கப்பட்டுவிட்டதாக அறிவித்தபோது அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்ட போதிலும் அவசர கால ஒழுங்கு விதிகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்கள் எவருமே விடுதலை செய்யப்படவில்லை. இன்றும் வழக்கு விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
அதேவேளையில் தற்பொழுது ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக அரசாங்கத்தினால் பதிலளிக்கப்பட்டுள்ளது. அப்பதிவில் அபிவிருத்தி மற்றும் நல்லினக்கத்தின் முன்னேற்றத்திற்காக பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது இச்செயற்பாட்டின் மூலம் பிற அதிகார வரம்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேசத்தின் சிறந்த நடைமுறைகளுக்கு உதவுவதாக அரசாங்கம் கூறியுள்ளதுடன் உயர்; நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குக்களை சட்டமா அதிபர் மறு ஆய்வு செய்கின்றார்;; என்று கூறியுள்ளமையையும் கவனத்தில் கொள்ளளாம். மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட வழக்கக்களை விரைவாக முடிப்பது தொடர்பாக அரசாங்கம் தனது பதிவில் கூறியுள்ளது.
ஆனால் இதேபோன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளை இல்லாதொழிப்பதாக 2016ஆம் ஆண்டு ஜ.நாவிற்கு வாக்குறுதியளித்து. பயங்கரவாதத் தடைச் சட்டத்தைரூபவ் பயங்கரவாதத் எதிர்புச் சட்டமாக பெயர் மாற்றமடையும் செயற்பாடுகள் நடைபெற்றன.
1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச்; சட்டத்திலும் பார்க்க சில பிரிவுகளில் வெளிப்படையாக பார்க்கும் பார்வையில் நெகிழ்ச்சித்தன்மையும் கணிசமான முன்னேற்றமும் காணப்படுவதாக புலப்பட்டாலும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பொழுது இந்த இரண்டு சட்டத்திற்கும் இடையே குறிப்பிடத்தக்க வேற்றுமையின்மையை அவதானிக்க கூடியதாகவிருந்தது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் 2018 ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்கீழ் கைது செய்யப்படும் ஆட்களுக்கு பாதுகாப்பின்மை காரணமாக பலராலும் “கடுமையானது” என வர்ணிக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சிங்களத் தலைமைகளின் எதிர்பின் காரணமாக நடைமுறைப்படுத்தாமல் கைவிடப்பட்டது.
உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குக்களை சட்டமா அதிபர் மறு ஆய்வு செய்கின்றார் என்பதனால் மட்டும் (தண்டணை வழங்கப்பட்ட கைதிகள் உட்பட) சகல அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படமாட்டார்கள் என்பதே யதார்த்தம். தண்டனை வழங்கப்பட்ட கைதிகளின் விடுதலையை தீர்மானிப்பவர் ஜனாதிபதியேயாவார். எனவே அரசியல் தீர்மானம் எடுக்கப்படுமாகவிருந்தால் மட்டுமே அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படலாம்.
இவ்வாறு ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டாலும் அது இவ்வாட்சியில் சாத்தியபடுமா? ‘ஒரு நாடு ஒரு நீதி’ அரசியல் கைதிகள் விடயத்தில் கடைப்பிடிக்கப்படாமை வெளிப்படையாகவே அவதானிக்கத்தக்கதாகும்.
அரசியல் கைதிகள் அரசியல் பழிவாங்களுக்கு உள்ளாகிவிட்டமை வேதனைக்குரியதே. கேள்வி:- தாங்கள் தமிழரசுக் கட்சியில் நிரந்தர உறுப்பினராக இருக்கின்றபோதும் செயற்பாட்டு அரசியலில் பங்கேற்காமல் அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன?
பதில்:- அமைதியாக இருத்தல் என்பதல்ல. எனது பணிகளை எப்போதும் நான் முன்னெடுத்துக் கொண்டே இருக்கின்றேன். சில இடங்களில் அமைதியாக இருப்பது போல் தென்பட்டாலும் கடமையைச் செய்வதில் இருந்து தவிர்ந்து கொள்வதாகாது. நமது மக்களுக்கு தமிழ்த் தேசியத்தின் எதிரிகளை அடையாளங்காட்டிட வேண்டி இருக்கின்றது. அத்தகைய எதிரிகள் தமிழ் தேசியத்துக்கு எந்தளவுக்கு அச்சுறுத்தல் மிகுந்தவர்கள் என்பது மிகவும் கவனமாகப்பார்க்கப்பட வேண்டியதாகும்.
கேள்வி:- கட்சிக்குள் உங்களுக்கு எதிரான தரப்பொன்று செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு தடைகளை ஏற்படுத்துகின்றதா?
பதில்:- அரசியல் களம் சதிகாரர்களால் நிறைந்தது. அதற்காக மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப் போவதில்லை. தமிழ்த் தேசியத்தின் எதிரிகள் சிலரிடமிருந்தே எனக்கான எதிர்ப்பு திட்டமி;ட்டு ஏற்படுத்தப்படுகின்றது. அவற்றை வீட்டுக்குள்ளிருந்தே எதிர்கொள்வேன். போலிகள் எல்லாக் காலத்திலும் வெற்றியோடு நிலைப்பதில்லை தானே. மக்கள் வெகு விரைவில் எல்லாவற்றையும் புரிந்துகொள்வார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM