வெளிநாட்டு பணியாளர்களை அழைத்து வருவதில் மோசடி : ஆர்ப்பாட்டத்திற்கு எதிர்க்கட்சி அழைப்பு 

Published By: Digital Desk 4

16 Mar, 2021 | 09:54 PM
image

(செ.தேன்மொழி)

வெளிநாட்டு பணியாளர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது இடம்பெறும் மோசடிகளை உடன் நிறுத்துமாறு குறிப்பிட்டு , அரசாங்கத்திற்கு அழுத்தம் செய்யும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆர்பாட்டமொன்று இடம்பெறவுள்ளதாகவும் , அதற்கு அனைவரையும் ஒத்துழைப்பு வழங்குமாறும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் ஹப்புஹாமி தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

நாட்டிற்கு அந்நிய செலாவணியை பெற்றுக் கொடுக்கும் வெளிநாட்டில் உள்ள இலங்கை பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள தருணத்தில் , அவர்கள் தொடர்பில் அக்கறைக் கொள்ளாமல் எம்மாள் இருக்கமுடியாது.  இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்புரிந்து வரும் பணிப்பெண்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக பணிபுரிந்து வரும் எம்நாட்டு பெண்களை , தங்களது தாய்நாட்டுக்கு செல்வதென்றால் செல்லுமாறும் அதன்போது வீசா அனுமதி பத்திரம் தொடர்பிலோ வேறு விடயங்கள் தொடர்பிலோ தமது அரசாங்கம் எந்தவித தலையீட்டையும் செய்யாது என்று அந்த நாடுகள் அறிவித்துள்ளன. இவ்வாறு நிவாரணம் வழங்கப்பட்டுள்ள போதிலும் , அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவில்லை.

இந்நிலையில் , பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ போலியான சாடல்களை எதிர்க்கட்சி மீது முன்வைக்கினறார். கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் பாதிப்படைந்துள்ள பணியாளர்களை அழைத்து வருவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இவ்வாறு நாட்டுக்கு வந்தாலும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பெருமளவான பணத்தை செலவிட நேரிடுகின்றது. இதனை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்பாட்டம் செய்வதற்காக வேறுப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்தில் , உரிய சாகாதார விதிமுறைகளுக்கமைய பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த ஆர்பார்ட்டத்தில் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01