அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி விவகாரம் குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு நாளை கூடி ஆலோசனை நடத்தவுள்ளது.
உலக அளவில் கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுவரும் தடுப்பூசிகளில், ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசி முக்கியமானது.
இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கு இரத்தம் உறைதல் ஏற்பட்டதாக தெரிவித்து, குறித்த தடுப்பூசிக்கு டென்மார்க், நோர்வே, ஐஸ்லாந்து போன்ற நாடுகள் தற்காலிகமாக தடை விதித்து ள்ளன.
இதனால் ஏனைய நாடுகளிலும் இந்த தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி விவகாரம் குறித்து ஆலோசிக்க உலக சுகாதார அமைப்பின் நிபுணர்கள் குழு நாளை கூட உள்ளது.
தடுப்பூசியின் பாதுகாப்பு தன்மை குறித்து, கிடைக்கப்பெற்றுள்ள தரவுகள் மூலம் ஆய்வு செய்யப்படும் எனவும் ஐரோப்பிய மருத்துவ அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, “ தற்போதைக்கு தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த வேண்டிய தேவை இல்லை” எனவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்தில் இந்த தடுப்பூசி போடப்பட்ட 1.7 கோடிக்கும் மேற்பட்டோரை பரிசோதித்ததில், நுரையீரல் அடைப்பு, நரம்பு பாதிப்பு உள்ளிட்ட எந்தவித பாதிப்புகளும் அதிகளவில் இருந்தமைக்கான ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM