மியன்மாரில் சீனாவுக்கு சொந்தமான 10 தொழிற்சாலைகளை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.
போராட்டக்காரர்களால் எரிக்கப்பட்ட தொழிற்சாலைகளில் பெரும்பாலானவை ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளாகும்.
மியன்மார் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அந்நாட்டின் ஜனாதிபதி வின் மைன்ட் உள்ளிட்ட ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் பலரையும் அந்நாட்டு இராணுவம் அதிரடியாக கைது செய்தது, சுமார் 5 வாரங்களுக்கு மேலாக இரகசி இடத்தில் சிறை வைத்துள்ளது.
இதேவேளை இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
மியன்மார் இராணுவமும் போராட்டக்காரர்கள் மீதான தங்களது அடக்குமுறையை மேலும் தீவிரப்படுத்தி உள்ளது.
துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு போராட்டக்காரர்களை விரட்டியடிப்பதை இராணுவம் வழக்கமாகியுள்ளது.
சீன அரசு மியன்மார் இராணுவத்துக்கு ஆதரவளிப்பதாக போராட்டக்காரர்கள் நம்புவதால்,சீன நிறுவனங்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்தையடுத்து இராணுத்தினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில், 26 பேர் கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 80 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
நேற்றையதினம் மியான்மரின் முக்கிய நகரங்களான யாங்கூன், மாண்டலே உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 38 பேர் கொல்லப்பட்டனர்.
மியன்மாரில் அதிகரித்து வரும் வன்முறைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளரின் சிறப்பு தூதர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM