(எம்.மனோசித்ரா)
கல்வி அமைச்சு மற்றும் பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவுக்கும் இடையில் உயர் கல்வித் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் கல்வித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்களை வலுப்படுத்துவதற்கும், கல்வி வாய்ப்புக்களை விரிவுபடுத்துவதற்கும் இயலுமான வகையில் உயர் கல்வித் துறையில் கல்வி மற்றும் விஞ்ஞானபூர்வமான அறிவுப் பரிமாற்றங்களுக்கான புலமைப் பரிசில் நிகழ்ச்சித்திட்டங்களை ஐந்து வருட காலப்பகுதிக்கு நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சு மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் கல்வி ஆணைக்குழுவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் குறித்த காலப்பகுதியில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் 800 முழுமையான புலமைப் பரிசில்களும், ஆரம்ப பட்டப்படிப்புக்கான கட்டணம் விடுவிக்கப்பட்ட 200 பகுதியளவிலான புலமைப்பரிசில்களும் உள்ளடங்கலாக 1000 புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆராய்ச்சிகள், மாநாடுகள் மற்றும் வேறு கற்கை நடவடிக்கைகளுக்காக இலங்கை , பாகிஸ்தான பல்கலைக்கழகங்களில் 50 பீட அங்கத்தவர்களை இரு நாடுகளின் பல்கலைக்கழகங்களில் நிலையான காலப்பகுதிக்குப் பரிமாற்றிக் கொள்வதற்கும், இவ் ஒப்பந்தத்தின் கீழ் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM