சர்வதேச பாவனையாளர்கள் பாவனையாளர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை பிரிவு ஏற்பாடு செய்த விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டம் நேற்று (15.03.2021) காலை 09.00 மணி தொடக்கம் பிற்பகல் 03.00 மணி வரை திருகோணமலை மட்டிக்களி பிரதேசத்தில் நடைபெற்றது.
பாவனையாளர் உரிமைகள், பாவனையாளர் சட்டங்கள் உள்ளடங்கிய துண்டுப்பிரசுரங்கள் வீதியால் பயணித்த பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
அத்துடன் SLS தரச்சான்றிதழ் உடைய தலைக்கவசம் உள்ளதா என்பது தொடர்பில் வீதியால் பயணித்த மோட்டார் சைக்கிள் பயணிகளிடம் பரீட்சித்து பார்க்கப்பட்டது.
தாம் தலைக் கவசங்களை வாங்கும் பொழுது கட்டாயமாக SLS தரச்சான்றிதழ் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாத வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அது தொடர்பான தகவல்களை மாவட்ட பாவணையாளர் பிரிவிற்கு வழங்குமாறு இதன்போது உரிய அதிகாரிகளால் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட பாவனையாளர் அதிகாரசபை பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்து பொலிசாரும் கலந்து கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM