(எம்.எப்.எம்.பஸீர்)
கொஹுவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆசிரி மாவத்தையில், எரிந்த காருக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் வர்த்தகரின் ஆள் அடையாளம் உயிரியல் மூலக் கூறுகள் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந் நிலையில் மரணத்துக்கான காரணத்தை கண்டரிய இன்று பிரேத பரிசோதனைகளை களுபோவில சட்ட வைத்திய அதிகாரி முன்னெடுக்கவுள்ளார்.
அரசின் மேலதிக இரசாயன பகுப்பாய்வாளர் ஜயமான்ன முன்னெடுத்த டி.என்.ஏ. மரபணு சோதனைகளில், இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறினார்.
கொஹுவளை - ஆசிரி மாவத்தையில் எரிந்த காருக்குள் இருந்து தீயில் கருகிய நிலையில் மீட்கப்ப்ட்ட சடலம், நுகேகொடை பகுதியில் வாகன உதிரிப் பாக வர்த்தக நிலையம் நடாத்தும் 33 வயதான வர்த்தகருடையது என கூறப்பட்டது.
இந் நிலையில் மீட்கப்பட்ட சடலம் மற்றும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் வர்த்தகரின் தாய், தந்தையின் டி.என்.ஏ. மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போது குறித்த டி.என்.ஏ. மாதிரிகள் ஒத்துப் போயுள்ளதாகவும், அதன்படி உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்ப்ட்ட 33 வயதான வர்த்தகரின் சடலமே அது என்பது அறிவியல் ரீதியாக நிரூபனமாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந் நிலையிலேயே மரணத்துக்கான காரணத்தை கண்டரிய இன்று பிரேத பரிசோதனைகளை களுபோவில சட்ட வைத்திய அதிகாரி முன்னெடுக்கவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM