(இராஜதுரை ஹஷான்)
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் மற்றும் கொவிட்-19 வைரஸ் தாக்கம் ஆகிய காரணிகளினால் வங்கி கடன்களை திருப்பி செலுத்தாத தொழில் முயற்சியாளர்களின் சொத்துக்களை கைப்பற்றாமல் கடனை திருப்பி செலுத்த நிவாரண காலவகாசம் வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வங்கி பிரதானிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
நிதியமைச்சில் இன்று வங்கி பிரதானிகளுடன் இடம் பெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொழில் முயற்சியாளர்களின் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண நிதியமைச்சு , மத்திய வங்கி மற்றும் ஏனைய வங்கிகள்ஒன்றினைந்து ஒருமித்த கொள்கையடிப்படையில் செயற்படுவது அவசியாகும்.
வங்கி சேவையில் இவ்வாறான பிரச்சினைநெடுகாலமாகவே காணப்படுகிறது. ஆகவே இரு தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்மானம் எடுப்பது அவசியமானதாகும்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம், கொவிட்-19 வைரஸ் தாக்கம் ஆகியவற்றின் தாக்கம் காரணமாக தொழில் முயற்சியாளர்கள் வங்கி கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிதி நெருக்கடிகளுக்கள்ளாகியுள்ளார்கள்.
இவ்வாறானவர்களின் சொத்துக்களை கைப்பற்றாமல் அவர்கள் கடளை திருப்பி செலுத்த நிவாரண காலவகாசம் வழங்குவது குறித்து வங்கி பிரதானிகள் ஒருமித்த தீர்மானத்i எடுக்க வேண்டும் என பிரதம்ர சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM