இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 532 ஆக அதிகரித்துள்ளதுடன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 88 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், இறுதியாக 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை இரவு 8 மணி வரை 178 புதிய கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 88 085 ஆக அதிகரித்துள்ளது.
இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 84 969 பேர் குணமடைந்துள்ளதோடு , 2589 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறுதியாக கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் விபரங்கள்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 86 வயதான பெண்ணொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
கம்பஹா பகுதியைச் சேர்ந்த 76 வயதான பெண்ணொருவர் ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஆணொருவர், கொழும்பு வடக்கு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 8 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
பமுனுகம பகுதியைச் சேர்ந்த 78 வயதான ஆணொருவர் வீட்டில் கடந்த 10 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
களுத்துறை பகுதியைச் சேர்ந்த 94 வயதான பெண்ணொருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM