கொழும்பு – கொஹூவலை பகுதியில் காரொன்றில் இருந்து எரிந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம் பாதிய மாவத்தையைச் சேர்ந்த 33 வயதான வர்த்தகருடையது என்பது மரபணு சோதனைகளில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட சடலம் மற்றும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் வர்த்தகரின் தாய், தந்தையிடமிருந்து பெறப்பட்ட டி.என்.ஏ, மாதிரிகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சடலம் மீது பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அந்த முடிவுகளில் உயிரிழந்தவர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனையின் பின்னர் மரணத்திற்கான காரணம் உறுதிசெய்யப்படும்.
கொஹூவலை - ஆசிரிமாவத்தை பகுதியில் கடந்த 10 ஆம் திகதி தீக்கிரையான நிலையில் நிறுத்தப்பட்டிருந்த காரை சோதனைக்குட்படுத்திய போது, அதிலிருந்து ஆண்ணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அந்த சடலம் களுபோவிலை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய வர்த்தகரொருவருடையது என சந்தேகம் வெளியிட்டனர்.
அதன் பின்னர் அதனை உறுதிபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட மரபணு சோதனைகளிலேயே உயிரிழந்தவர் தொடர்பான விபரம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM